ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உடனடியாக 100 நாள் வேலையை துவங்கி பயனாளி களுக்கு வேலை அளிக்க வேண்டும், சட்டக்கூலி ரூ.229ஐ குறைக்காமல் வழங்க வேண்டும், அனைத்து ஊராட்சிகளி லும் போர்க்கால அடிப்படை யில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் திருநாவலூர், தியாகதுருகம், திருவெண்ணைநல்லூர், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் மீமகுளம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பும், கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மேல் புவனகிரி ஒன்றிய அலுவலகம் முன்பும், திரு வண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பும் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.