சென்னை, ஜூலை 9 - சிதம்பரம், நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ் சன விழா நடைபெற உள் ளது. இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப் பட வில்லை என்று அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டது.
இதையடுத்து நீதிபதி கள், ‘கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக் கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்பட வில்லை. இதனால், பக்தர் கள் தரிசனம் செய்யலாம். இதில் விதிமீறல்கள் இருந் தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். யாராவது சாமி தரிசனத்தை தடுக்கும் வித மாக சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டால், அவர்களுக்கு எதிராக அற நிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் அறநிலையத்துறை அறிக்கை சமர்ப்பிக்க வேண் டும்’’ என்று உத்தரவிட்டனர்.