tamilnadu

img

 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடு

 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும்,  குடிநீர் பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும், காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் என்.சாரங்கன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜி.மோகனன்,  செயலாளர் கே.நேரு, லாரன்ஸ், பழவேரிபாஸ்கர், டி.லிங்கநாதன், ஆறுமுகம், பி.கே பெருமாள், எச்.முருகேசன், வி. பொன்னுசாமி, எம்.வள்ளிக்கண்ணு உட்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.