தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுமார் 13 ஆரம்ப மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து ஐவிடிபி தொண்டு நிறுவனம் சார்பில் அன்னையர் தினம் கிருஷ்ணகிரியில் கொண்டாடப்பட்டது. ஐவிடிபியின் தலைவர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சிஸ் தலைமை தாங்கினார். சுண்டம்பட்டி அந்தோனியார் தேவாலயத்தின் பங்குத்தந்தை லூர்துசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் பாஸ்கரன், மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் வின்சென்ட், டிலைட் நிறுவன தென்னிந்திய மேலாளர் பாவலன், அனுமந்தபுரம் ஐவிடிபி கம்ப்யூட்டர் அக்காடமி திட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி எலிசபெத் மேரி ஏஎம்எஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.