சென்னை, மார்ச் 31- பள்ளிக் குழந்தைகள் பயன்படுத் தும் பென்சில், ரப்பருக்கு வரி போட்டது தான் மோடியின் சாதனை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
18ஆவது மக்களவைத் தேர்தலுக் கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வெளியிட, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.எச். வெங்கடாசலம் பெற்றுக் கொண்டார்.
மத்தியிலும் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை
வேளாண் நெருக்கடிக்கு நாடாளு மன்ற சிறப்பு அமர்வு நடத்துவதோடு, தமிழகத்தைப் போன்று தேசிய அள வில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்; வேலை யில்லாக் கால நிவாரணம் வழங்கப் படும்; ஒன்றிய அரசு கொண்டு வந்த 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் ரத்து செய்யப்படும்; குறைந்தபட்ச கூலி யாக 26 ஆயிரம் ரூபாய், குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வழிவகை செய்யப்படும்; அக்னிபாத் திட்டம், நிதி ஆயோக் ரத்து செய்யப் படும்; திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும்; சிறுபான்மை ஆணையத் திற்கு அரசியலமைப்பு சட்ட தகுதி வழங்கப்படும்; பொதுப்பட்டியலில் உள்ள பொருட்கள் குறித்து முடிவெ டுக்கும் முன் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும்; காஷ்மீர் பிரிக்கப்பட்டது ரத்து செய்யப்படும் போன்ற அம்சங்கள் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்தும் பாஜக
பின்னர் செய்தியாளர்களைச் சந் தித்த இரா. முத்தரசன், “தொழிலாளர் உரிமைகளைப் பறித்து வரும் ஒன்றிய அரசு, முதலாளிகள் வாங்கிய கடன் களை தள்ளுபடி செய்கிறது. ஆனால், மாணவர்களின் கல்வி கடன்களை ரத்து செய்ய மறுக்கிறது. மதத்தை வைத்து மக்களை பிளவுப்படுத்துகிறது. பாஜக ஆட்சி செய்யாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து போட்டி அரசாங்கம் நடத்துகிறது. 2வது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கா மல் வஞ்சனை செய்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் மறைக்க பிரதமர் பொய்யை மட்டுமே சொல்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கள் கேள்விக்குறியாகி வருகிறது. ஒரு சில தீர்ப்புகளுக்கு பிறகு நீதிபதிகள், ஆளுநர்களாக, எம்.பி.க்களாக நியமிக் கப்பட்டுள்ளனர். எனவே, இந்த தேர் தல் அரசியலமைப்பு சட்டம், ஜனநாய கம் காக்கும் போராகும். இதில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி களுக்கும் பதிலளித்த முத்தரசன், “பெட் ரோலியப் பொருட்கள் விலை உயரும் போது ஒன்றிய அரசு சம்பந்தம் இல்லை என்பதும், குறைக்கும்போது ஒன்றிய அரசின் சாதனை என்றும் கூறுகின்றனர். கேஸ் விலை, பெட்ரோல் விலை, நூறு நாள் வேலை திட்ட பணி நாட்கள் உயர்வு போன்ற அறிவிப்புகள் வெறும் கண் துடைப்பு” என்று குறிப்பிட்டார்.
மாநில துணைச் செயலாளர்கள் நா. பெரியசாமி, மூ. வீரபாண்டியன், நிர் வாகிகள் வகிதா நிஜாம், மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத், மருத்துவர் ஆர். சாந்தி, பா.கருணாநிதி, எஸ்.கே. சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.