சென்னை, அக்.29- தமிழக மக்கள் அனை வரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதிசெய்யும் வகையில், இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கு மாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:- சிக்கனம் என்பது தனிப் பட்ட வளர்ச்சியை மட்டு மல்ல, ஒட்டுமொத்த முன் னேற்றத்தையும் உறுதிப் படுத்தும் செயல். பணத்தை மட்டுமல்ல, பொருட்க ளையும், இயற்கையின் வள ங்களையும் பொறுப்புடன் செலவழிப்பதில் சிக்கனம் தொடங்குகிறது. ‘பணத் தைத் தண்ணீராய்ச் செல வழித்தல்’ என்கிற உவ மையிலிருந்து மாறுபட்டு, ‘தண்ணீரைப் பணம் போல செலவழிக்கும்’ கட்டா யத்தை உலகமே இப்போது உணர்ந்திருக்கிறது. அக்டோபர் 30 அன்று உலக சிக்கன நாளாக கடை ப்பிடிக்கிறது. ‘குறைந்த பட்சத் தேவைகளுடனான வாழ்க்கை’ என்கிற கருத் தியல் விரைவாகப் பரவி வருகிறது.
ஒரு பொருளை, ‘தேவையா?’ என்று பல முறை சிந்தித்து வாங்கு வதில் சிக்கனம் தொடங்கு கிறது. விழிப்புணர்வுடன் வாழ் கையை அணுகுகிறவர்கள் குறைந்தபட்சத் தேவை களை மட்டும் கருத்தில் கொண்டு செலவு செய்கிறா ர்கள்; வருமானத்தில் பெரும்பகுதியைச் சேமித்து வைக்கிறார்கள். பெறு கிற வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைச் சேமிப்பிற் கும், மூன்றில் ஒரு பங்கை உணவு, உடை போன்ற வற்றிற்கும், மூன்றில் ஒரு பங்கைக் கல்வி, பரா மரிப்பு, வரி போன்ற வற்றிற்கும், பத்தில் ஒரு பங்கை கேளிக்கை, பொழுதுபோக்குக்காகவும் யார் செலவழிக்கி றார்களோ, அவர்களே வள மான வாழ்க்கையை வாழ முடியும். சேமிப்பே ஒருவர் வாழ்க் கையை நம்பிக்கைக் குரியதாக மாற்றுகிறது. சேமி ப்பது மட்டுமல்ல, அதைச் சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.