“நாடாளுமன்ற புதிய கட்டடம் கட்டி ஓராண்டு தான் ஆகிறது. அதற்குள் ஏற்பட்ட நீர்க் கசிவு ஏற்பட்டுள்ளது. அதுவும் ஜனாதிபதியால் பயன்படுத்தப்படும் நாடாளுமன்ற வளாகப் பகுதியில். நாடாளுமன்றத்திற்கு வெளியே நீட் வினாத்தாள் கசிவு, நாடாளுமன்றத்திற்கு உள்ளே தண்ணீர் கசிவு. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்” என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.