tamilnadu

img

5 மாதத்தில் ரூ.7லட்சம் கோடி முதலீடு 30 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்!தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்

சென்னை, மே 31- தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரூ. 7 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது; இதன்மூலம் 30  லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டை, 2030-ஆம் ஆண்டுக் குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது  என்றும் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

“சென்னையில் ஜனவரி 7 மற்றும்  8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டா ளர்கள் மாநாடு மிகவும் சிறப்பான முறை யில் நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ. 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 5 மாதத்தில் ரூ. 7 லட்சம் கோடிக்கு முத லீடுகள் கிடைத்துள்ளது.

இந்த முதலீடு கள் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் பிக்சல் ஸ்மார்ட்போன், டிரோன் உள்ளிட்டு சாதனங்கள் தயாரிக்க  கடந்த வாரம் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. மேலும் டெஸ்லா ரைவல் வின் பாஸ்ட், டாடா பவர், ஃபாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ், பெகட்ரான் ஆகிய முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்துள்ளன.

 தமிழ்நாட்டில் தொழில் தொடங்கு வதற்கு, தேவையான அனுமதிகளைப் பெறுவதற்கும், முதலீட்டாளர்கள் எளி தாகச் செயல்படுவதற்கான நடைமுறை களை அரசு நெறிப்படுத்தி உள்ளது. குறிப்பாக பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குறிப்பிட்டுள்ளார்.