12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ஆம் தேதி நிறைவடைந்தது. இதன் தேர்வு முடிவுகள் மே 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதனிடையே, மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வேறு தேதிக்கு மாற்ற பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.