தமிழகத்தில் இன்று 1,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 1,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,12,142 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,048 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 1,103 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7,90,965 பேர் குணமடைந்துள்ளனர்.