tamilnadu

சமூக நலப்பணிகளில் 100 ஆண்டுகள்

சென்னை, பிப்.19- போலியோ ஒழிப்பு,கல்வி நிலையங்களில் அடிப்படை வசதிகளை செய்துதருதல் உள்ளிட்ட பணிகளை இந்தியாவில் மேற்கொண்டுவரும் ரோட்டரி அமைப்பு 100 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையொட்டி கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர் ஜெகதீர் தனக்கர் கலந்து கொண்ட ரோட்டரி அமைப்பின் சமூகப்பணிகளை பாராட்டினார். சங்கத்தின் சர்வதேச தலைவர் மார்க் மாலோனி பேசுகையில் இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டில் ரோட்டரி அமைப்பு சார்பில் 22.81 மில்லியன் டாலர் மதிப்புள்ள சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றார். பள்ளிகளில் கழிப்பிட வசதி, அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துதல், பெண் குழந்தைகள் மற்றம் பெண்களின் சுகாதாரத்தை பேணுதல், தூய்மையான குடிநீர்வசதி, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் மறுசீரமைப்புக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாக கூறினார்.