tamilnadu

img

சாதனை படைத்த அரசுப் பள்ளிகள் 1,364 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி!

சென்னை, மே 10 - தமிழ்நாட்டில் 7 ஆயிரத்து 491 மேல்நிலைப் பள்ளிகள், 5 ஆயிரத்து 134 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 625 பள்ளி களைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் 4  ஆயிரத்து 105 பள்ளிகளில் படித்த மாண வர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள் ளனர். அதேபோன்று, ஆயிரத்து 364 அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி கள் 87.97 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77 சதவிகிதம், தனியார் சுயநிதி பள்ளிகள் 97.43 சதவிகிதம் என்ற அளவில் தேர்ச்சி பெற்றுள்ளன. 

இருபாலர்கள் படிக்கும் பள்ளி களில் தேர்ச்சி விகிதம் 91.93 சதவிகித மாகவும், பெண்கள் பள்ளிகளில் தேர்ச்சி  விகிதம் 93.80 சதவிகிதமாகவும், ஆண் கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 83.17 சதவிகிதமாகவும் உள்ளது.

20 ஆயிரம் பேர் நூற்றுக்கு நூறு கணிதப் பாடத்தில் வரலாற்றுச் சாதனை!
இந்த ஆண்டு அதிகபட்சமாக கணிதப் பாடத்தில் 20 ஆயிரத்து 691  பேர் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.78 சதவிகிதம் ஆகும். தமிழ்நாடு கல்வி வரலாற்றில் இது உச்ச பட்சமாகும். 

கணிதப் பாடத்தில், கடந்த ஆண்டில் 3 ஆயிரத்து 649 மாணவர்கள் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் பாடத்தில் 5 ஆயிரத்து 104 பேரும் (95.74 சதவிகிதம்), சமூக அறிவியல் பாடத்தில் 4 ஆயிரத்து 428 பேரும் (95.74 சதவிகிதம்), ஆங்கி லப் பாடத்தில் 415 பேரும் (99.15 சத விகிதம்) நூற்றுக்கு நூறு மதிப்பெண் களைப் பெற்றுள்ளனர். இதுவே கடந்த முறை அறிவியலில் 3 ஆயிரத்து 584 பேரும், சமூக அறிவியலில் வெறும் 320 பேரும், ஆங்கிலத்தில் 89 மாண வர்களும் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.

தமிழில் 8 பேர் நூற்றுக்கு நூறு!
தமிழ்ப் பாடத்தில் 8 மாணவர்கள் முழுமையாக 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த முறை ஒருவர்கூட முழு மதிப் பெண் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். மேலும், இந்த முறை தமிழ்ப் பாடத்தில் 96.85 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள்  சிறைவாசிகள்
மாநிலம் முழுவதும் மாற்றுத்திற னாளி மாணவர்கள் 13 ஆயிரத்து 510 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய நிலையில், அவர்களில் 12  ஆயிரத்து 491 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். அதேபோல, தேர்வெழுதிய 260 சிறைவாசிகளில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நலத்துறை பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி களில் 3 ஆயிரத்து 011 மாணவர்கள், 2  ஆயிரத்து 823 மாணவிகள் என 5 ஆயி ரத்து 834 மாணவர்கள் தேர்வு எழுதி னர். இதில் 2 ஆயிரத்து 400 மாண வர்கள், 2 ஆயிரத்து 540 மாணவிகள் என 4 ஆயிரத்து 940 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் படித்து தேர்வு எழுதிய ஆயிரத்து 828  மாணவர்களில் ஆயிரத்து 690 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகி தம் 92.45.

மாநகராட்சி நகராட்சிப் பள்ளிகள்
மாநகராட்சி பள்ளிகளில் 11 ஆயி ரத்து 629 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 9 ஆயிரத்து 823 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். அதேபோல், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகளில் தேர்வெழுதிய 2 ஆயிரத்து 157 பேர்களில் ஆயிரத்து 979 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 91.75 ஆகும். 

நகராட்சிப் பள்ளிகளில் 8 ஆயி ரத்து 347 மாணவர்கள் தேர்வு எழுதி யதில், 7 ஆயிரத்து 189 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக நலத் துறை பள்ளிகளில் படித்த 342 மாண வர்களில் 296 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். வனத்துறை பள்ளிகளில் 143 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஜூலை 2 முதல் துணைத்தேர்வு
பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மறுகூட்டல் செய்வ தற்கு மே 15 முதல் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்; விடைத்தாள் நகல் பெறவும் மே 15 முதல் 20 வரை விண்ணப் பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில்  மே 13 முதல்  பிளஸ் 1 சேர்க்கை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பிளஸ்-1, மாணவர் சேர்க்கை மே 13 (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. 

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

முதல் குரூப், சயின்ஸ் குரூப், வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல், வரலாறு பாடங்களை கொண்ட 3-வது குரூப்பிற்கு கடுமையான போட்டி நிலவக்கூடும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.