tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உலக மரபு வார விழா கங்கைகொண்ட சோழபுரத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி

அரியலூர், நவ.27 - இந்திய தொல்லியல் துறை சார்பில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக மரபு வார விழாவையொட்டி தனியார் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அனில்குமார் பரிந்துரையின் பேரில், உலக கலாச்சார பாரம்பரிய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனொரு பகுதியாக, தழுதாழை மேடு தனியார் பள்ளி மாணவர்களின் கலைநயம் மிக்க ஆதிவாசிகள் நடனம் நடைபெற்றது. பின்னர், கோவில் வெளிப்புற-உட்புற பிரகாரத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

 இதில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கங்கைகொண்ட சோழ புரம் கோயில் செயல் அலுவலர் செந்தமிழ்ச்செல்வி, பள்ளி  ஆசிரியர்கள் மற்றும் தொல்லியல் துறை பராமரிப்பு உதவி யாளர்கள் கலந்து கொண்டனர். தொல்லியல் துறை பரா மரிப்பு உதவியாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

அறந்தாங்கியில் 2 வீடுகள் சேதம்

அறந்தாங்கி, நவ.27 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது.

அறந்தாங்கி நகரம் 1 ஆவது வார்டு வடக்கு வீதியில் செந்தில், இவரது மனைவி செல்வி வசித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விடும் என்ற அச்சத்தில் வேறு இடத்திற்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில், வீட்டின் சுவர்  இடிந்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  நகர்மன்றத் தலைவர் இரா.ஆனந்த் சேதமடைந்த வீட்டை  பார்வையிட்டு நிதி உதவி வழங்கினார். நகர்மன்ற உறுப்பி னர் பிரகாஷ் மற்றும் ஐயப்பன் உடனிருந்தனர். இதேபோல் ஆவுடையார்கோவில் தாலுகா கதிராமங்க லம், சடையமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நடேசன் என்பவ ரின் வீட்டுச் சுவர் இடிந்து சேதமானது. மழைக்கு இடிந்து விழுந்து சேதமான வீடுகளை வருவாய்த் துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி

புதுக்கோட்டை, நவ.27 - புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே பேராம் பூரைச் சேர்ந்தவர் குமார் மகன் தர்ஷன்(13). இவர் அரசு பள்ளி யில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் தர்ஷன் வீட்டின் அருகே  விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஓரமாக சென்ற ஒயரில் கைப்பட்டு மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த உறவி னர்கள் தர்ஷனை மீட்டு விராலிமலை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியி லேயே அவர் இறந்துவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த மாத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எழுதுபொருட்கள் வழங்கல்

பாபநாசம், நவ.27 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப் பள்ளி (கிழக்கு) மாணவர்களுக்கு அய்யம்பேட்டை  டெல்டா ரோட்டரி கிளப் சார்பில் எழுதுபொருட்கள் வழங்கப் பட்டன. தலைவர் ரவிச்சந்திரன் பள்ளி மாணவர்களுக்கு பென்சில், ரப்பர், ஸ்கேல் அடங்கிய பாக்ஸ், மாணவர்களின் பயன்பாட்டிற்கு 6 நாற்காலிகளை வழங்கினார். இதில் அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் செயலர் முத்து குமரன், பொருளாளர் கோபால், உறுப்பினர்கள் சாதிக் பாட்சா,  ரகமதுல்லா, பள்ளித் தலைமை ஆசிரியை சுமதி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அறந்தாங்கி, நவ.27 -  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் நகராட்சி  துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் அடங்கிய குழுவினர் அக்னி பஜார் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய 12 கடைகளில் இருந்து சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பை வைத்திருந்தவர்களுக்கு ரூ.4500 அபராதம் விதிக்கப்பட்டது.

தாட்கோ கடன்கள் பெற  விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, நவ.26 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் இன மக்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூல மாக தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்  கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்படி கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.  இக்கடன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் திட்டம்-1 மற்றும் திட்டம்-2 இன் படி கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதுவரையில் திட்டம்-1 இன்கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.98,000, நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 என இருந்து வந்த  நிலையில், தற்போது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் அனைவருக்கும் ஆண்டு வருமானம் ரூ.3,00,000 என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வருமான  உயர்வு 1.10.2024 முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் விண்ணப்பத்துடன் சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் திட்ட  தொழில் அறிக்கையுடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (தொலைபேசி எண். 0431– 2401860), திருச்சிராப்பள்ளி மண்டல கூட்டுறவு  சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், திருச்சி ராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்

பேராவூரணி நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு

தஞ்சாவூர், நவ.27 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் புதன்கிழமை ஆய்வு பணியை மேற்கொண்டார்.  அப்போது, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கோப்புகள், இதர ஆவணங்கள், நீதிமன்றத்திற்கு தேவையான வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

முன்னதாக, மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்தை, பேராவூரணி நீதிமன்ற நீதிபதி என்.அழகேசன் வரவேற்றார்.  அப்போது பேராவூரணி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.வி.சீனிவாசன், செயலாளர் சிவேதி ஏ.ஆர்.நடராஜன் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் பசுபதி (பேராவூரணி), துரைராஜ் (சேதுபாவாசத்திரம்), உதவி ஆய்வாளர் வீரமணி (திருச்சிற்றம்பலம்) ஆகியோர் உடனிருந்தனர்.

 பேராவூரணி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் சார்பில், பேராவூரணி நீதிமன்றத்தில் பணியாற்றி அண்மையில் மறைந்த முஜிபுர் ரஹ்மான் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்குமாறு மாவட்ட முதன்மை நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்தார்.

சாலை விபத்தில் பெண் பலி:  5 பேர் காயம்

புதுக்கோட்டை, நவ.27 - திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு செவ்வாயன்று பகலில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப் பட்டது. இந்தப் பேருந்தை அறந்தாங்கி ஏகணிவயலைச் சேர்ந்த எஸ்.கார்த்திக் ஓட்டி வந்துள்ளார். நல்லூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது, முன்னே சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல இவர் முயன்றதாகத் தெரி கிறது. அப்போது, எதிரே வந்த லாரியின் பக்கவாட்டில் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், தனியார் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த புதுக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சேட்டு என்பவரின் மனைவி ஆமீனாபீவி (59)  உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும்  காயமடைந்த பயணிகள் 5 பேர் கீரனூர் அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அந்த இடத்தி லிருந்து தப்பியோடிவிட்டனர். விபத்து நேரிட்டபோது, லேசான மழைத் தூறல் தொடர்ந்து கொண்டே இருந்தது. சுமார் அரை மணி நேரத்துக்கு புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாத்தூர் போலீ சார் வழக்குப் பதிந்து, தனியார் பேருந்து ஓட்டுநர் எஸ். கார்த்திக், லாரி ஓட்டுநர் பாலாண்டாம்பட்டியைச் சேர்ந்த முரு கேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோட்டக்கலை விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு

பாபநாசம், நவ.27 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அம்மாபேட்டை வட்டா ரத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொ) சினேகப்பிரியா, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.  

அதில், “மழையினால் பயிர்களில் நீர் அதிகமாக தேங்கி நின்றாலோ அல்லது மழை மற்றும் காற்றினால் பயிர்களில் சேதம் ஏற்பட்டாலோ வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை உடனடியாக அணுக வேண்டும். விவசா யிகள் தங்கள் தோட்டங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன  மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டு பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். தோட்டத் தில் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டும்.

இளம்  செடிகள் காற்றினால் பாதிக்காதவாறு, தாங்கும் குச்சிகளைக்  கொண்டு கட்ட வேண்டும். காய்கறி பயிர்களுக்கு உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.  டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சான உயிரியல் கொல்லி மருந்துகளை வேர்ப்பகுதி யில் இட்டு நோய் வராமல் தடுக்க வேண்டும். மழை அதிக மாக உள்ள நாட்களில் தண்ணீர் பாய்ச்சுவது மற்றும் உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.

வாழை தோட்டங்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும்.  வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும். 80 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை  செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.