சிவகங்கை, ஆக.2- யாதும் ஊரே; யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா.... எனப் பாடிய பெரும்புல வன் கணியன் பூங்குன்றனார் பிறந்த மகிபாலன்பட்டியில் மணி மண்டபம் செல்லும் வழி என துருப்பிடித்த பலகை மட்டுமே பல ஆண்டுகளாக உள்ளது. ஆனால் எங்கு தேடியும் மணிமண்டபத்தை காணவில்லை. ஐக்கியநாடுகள் சபையில் எழுதக்கூடிய வாசகத்தைக் கொடுத்த உலகம்போற்றும் தமிழ்ப் புலவனுக்கு செய்யும் மரி யாதை இதுதானா. அதே சம யத்தில் இந்த ஊரில் வாழும் மக் கள் “பூ” என்ற எழுத்து ஆரம் பிக்கும் பெயர்களையே தங்க ளின் குழந்தைகளுக்கு சூட்டு வதை வழக்கமாக கொண்டுள் ளார்கள். கனியன் பூங்குன்றனா ருக்கு உரிய மரியாதை செய்ய சிவகங்கை மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.