அரசு மருத்துவமனையை விரைவில் திறக்கக் கோரிக்கை
திருப்பூர், ஜூன் 29- 15 வேலம்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவ மனையை உடனடியாக திறக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் திருப்பூர், 15.வேலம்பாளையம் நகர 9 ஆவது மாநாடு, அனுப்பர்பாளை யம் பகுதி காமாட்சி அம்மன் பாத் திர தொழிலாளர் சங்க மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. வெண் கொடியை நகரக்குழு உறுப்பினர் மதிய ரசு ஏற்றி வைத்தார். நகரப் பொருளாளர் நா.இளவேனில் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.அருள் துவக்கவுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் சந்தோஷ் குமார் வாழ்த்திப் பேசினர். நகரச் செயலாளர் வசந்த் அறிக்கையை முன்வைத்தார். இம்மாநாட்டில், வேலம்பாளையம் அரசு மருத்துவமனையை திறப்பதற் கான தேதியை அறிவிக்க வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை தடுத் திடவும், பெண்கள் குழந்தைகள் மீது நடக்கக்கூடிய வன்முறைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை காவல் துறை தடுக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சங்கத்தின் நகரத் தலை வராக சிவராமகிருஷ்ணன், செயலாள ராக தினேஷ் குமார், பொருளாளராக சிரஞ்சீவி, துணைத்தலைவராக சந் தியா, இணைச்செயலாளர்கள் சதீஷ், புனிதன் உட்பட நகரக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடி வில், மாவட்ட இணைச்செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி நிறைவுரை யாற்றினார். ஈரோடு இதேபோன்று, வாலிபர் சங்கத் தின் பெருந்துறை தாலுகா 16 ஆவது மாநாடு, பெருந்துறையில் பி.சதீஷ் தலைமையில் நடைபெற்றது. வெண் கொடியினை பி.கெளரிசங்கர் ஏற்றி வைத்தார். மாவட்ட உதவிச்செயலாளர் பி.அன்பு ஜனாதிபதி துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.ஏ. விஸ்வநாதன் வாழ்த்திப் பேசினார். இம் மாநாட்டில், பெருந்துறையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் காலிப்பணிட யிடங்களை நிரப்ப வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத் தின் தாலுகா தலைவராக செ.அஜித் குமார், துணைத்தலைவராக ராஜா, செயலாளராக கே.சதீஷ், துணைச்செய லாளராக வி.ஏ.வசந்த், பொருளாள ராக பி.கௌரிசங்கர் உட்பட 9 பேர் கொண்ட தாலுகாக்குழு தேர்வு செய் யப்பட்டது. மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி நிறைவுரையாற்றினார்.