tamilnadu

img

கூலி உயர்வை மறுப்பதா? விசைத்தறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வை மறுப்பதா? விசைத்தறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஜூன் 19 - அரசு தலையிட்டு அறிவித்துள்ள ஒப் பந்தக் கூலியை தர மறுக்கும் ஜவுளி உற் பத்தியாளர்களை கண்டித்துஅவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். விசைத்தறி நெசவுக் கூலியை உயர்த்தக் கோரி கூலிக்கு நெசவு செய் யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர், அவிநாசி, பல்லடம், தெக்க லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்  வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் ஆகிய போராட்டங்களை மேற் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அரசு நிர்வாகம் தலையிட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரி மையாளர்களையும் அழைத்துப் பேசி  புதிய நெசவுக் கூலி உயர்வு ஒப்பந் தத்தை அறிவித்தனர். இதன்படி சோம னூர் ரகத்திற்கு 15 சதவிகிதம், இதர  ரகங்களுக்கு 10 சதவிகிதம் என்ற அடிப்ப டையில் கூலி உயர்வு ஒப்பந்தம் அறிவிக் கப்பட்டது. இதில் சோமனூர் ரகங்க ளுக்கு உரிய கூலி உயர்வு ஒப்பந் தத்தை அந்த வட்டார விசைத்தறி ஜவுளி  உற்பத்தியாளர்கள் அமல்படுத்தி வரு கின்றனர். அதே சமயம் அவிநாசி, மங்க லம், பல்லடம், தெக்கலூர் உள்ளிட்ட  பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் இதர ரகங்களுக்கான 10 சதவிகித கூலி  உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் அமலாக்காமல் உள்ளனர். இது குறித்து  தொடர்ந்து வலியுறுத்தியும் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே  இது குறித்து விசைத்தறி உரிமையா ளர்கள் கூட்டமைப்பினர் கலந்தாலோ சித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். எனி னும் இந்த போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. இதை யடுத்து ஜூன் 19 அன்று அவிநாசி புதிய  பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட் டம் நடத்துவது என்று முடிவு செய்த னர். இதில் அரசு அறிவித்த ஒப்பந்த  கூலி உயர்வை அமல்படுத்த மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித் தும், தமிழக முதல்வர் தலையிட்டு கூலி  உயர்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு  காண வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவி நாசி விசைத்தறியாளர் சங்க நிர்வாகி முத்துச்சாமி தலைமை வகித்தார். இதில்  தெக்கலூர் பொன்னுச்சாமி, சோமனூர்   பூபதி, புதுப்பாளையம் நடராஜ், பெரு மாநல்லூர் துரைசாமி, கணக்கம்பாளை யம் வேலுச்சாமி உள்ளிட்ட சங்க நிர்வா கிகள் கலந்து கொண்டனர். விசைத்தறி யாளர்கள், பெண்கள் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.