tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு, ஜூன் 29- சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறி யலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூர்  ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பவானி சாகர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், கடந்த 25 நாட்களாக குடிநீர் விநி யோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம், அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள்  பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொது மக்கள் 200க்கும் மேற்பட்டோர், ஞாயிறன்று சத்தியமங்க லம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களு டன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்து வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார், பொதுமக்களி டம் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டனர்.  அப்போது, 25 நாட்களாக குடிநீர் வரவில்லை; கேட்டால்  குழாய் உடைந்துவிட்டது என கூறுகின்றனர். உடைப்பை சரி  செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. போர்வெல் தண்ணீரும் வருவதில்லை. இதெல்லாம் அதிகாரிகளுக்கு தெரியாதா? என மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி  அதிகாரி, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் விநியோ கம் செய்யப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் போராட் டம் கைவிடப்பட்டது.

அணைகள் நிலவரம் (ஞாயிற்றுக்கிழமை)

பவானிசாகர் அணை நீர்மட்டம்:93.54/105அடி நீர்வரத்து:5144கனஅடி நீர்திறப்பு:1255கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:52.10/72அடி நீர்வரத்து:5537கனஅடி நீர்திறப்பு:60கனஅடி ஆழியார் அணை  நீர்மட்டம்:111.85/120அடி நீர்வரத்து:1028கனஅடி நீர்திறப்பு:134கனஅடி திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:42.30/60அடி  நீர்வரத்து:681கனஅடி நீர்திறப்பு:697கனஅடி

ஒன்றிய அமைச்சர் கோவை வருகை

கோவை, ஜூன் 29- ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங், மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை காண்பதற்காக ஞாயிறன்று கோவை வந்துள்ளார். ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்,  தனி விமானம் மூலம் தில்லியிலிருந்து கோவை விமான  நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு மாநில ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட  ஆட்சியர் பவன்குமார், மாநகர காவல் ஆணையர் சரவணன சுந்தர், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பாது காப்பு படை உயரதிகாரிகள் வரவேற்பளித்தனர். ராஜ நாத்சிங்-கின் மனைவி சாவித்திரி சிங் (72) உடல் நலக் குறைவு காரணமாக மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள தனி யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகிறார். அவரை பார்ப்பதற்காக ராஜநாத்சிங் கோவை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோவை விமான நிலையம் உட்பட நாடு  முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு இ-மெயில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர்  வரும் சமயத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால்  பரபரப்பு நிலவியது.