tamilnadu

img

ரிஸ்க் அலவன்ஸ் வழங்கிட வேண்டும் தனியார் பாதுகாவலர் மாநாடு வலியுறுத்தல்

ரிஸ்க் அலவன்ஸ் வழங்கிட வேண்டும் தனியார் பாதுகாவலர் மாநாடு வலியுறுத்தல்

கோவை, ஜூன் 26- ஏடிஎம் மையங் களில் பணியாற்றும் தனியார் பாதுகாவ லர்களுக்கு ரிஸ்க் அலவன்ஸ் வழங்க வேண்டும் என சிஐடியு கோவை மாவட்ட தனியார் பாதுகாவலர் சங்க மாநாடு வலியு றுத்தப்பட்டது. கோவை மாவட்ட தனியார் பாதுகாவலர் சங்க சிஐடியு ஆண்டு பேரவை வியாழனன்று கோவை காட்டூர் பஞ்சாலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் எம்.பரமேஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர் டி.சீனிவாசன் வரவேற்றார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் என்‌.செல்வராஜ், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஏ.மணி ஆகியோர் முன்வைத்தனர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.ரத்தினக்குமார் துவக்க உரையாற்றினார். இதில், தனியார் பாதுகாவலர்களுக்கு ரூ.26.000 குறைந்த பட்ச ஊதியமாக வழங்க வேண்டும். பணியின் போது  சமூக விரோதிகளால் மரணம் ஏற்பட்டால் பாதுகாவலர் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரணத் தொகையை பணிபுரியும் நிறுவனம் வழங்க வேண்டும். செக்யூரிட்டிகள் பணிபுரியும் இடம் 10 கிலோ மீட்டருக்குள் இருக்குமாறு பணிவழங்க வேண்டும். ஏ.டி.எம் மில் பாதுகாப்பு பணியில் உள்ள செக்யூரிட்டிகளுக்கு ரிஸ்க் அலவன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் புதிய தலைவராக எல்.ஜி.சிவகுமார், செயலாளராக என்.செல்வராஜ், பொருளாளராக எம். பரமேஸ்வரன் மற்றும் 12 பேர் கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி நிறைவுரையாற்றினார். முடிவில், நிர்வாகக் குழு உறுப்பினர் பால விநாயகம் நன்றி கூறினார்‌.