tamilnadu

img

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியை மாற்ற எதிர்ப்பு

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியை மாற்ற எதிர்ப்பு

சேலம், ஜூன் 26- ஏற்காடு பகுதியிலுள்ள ஏக லைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியை மாற்றுவதற்கு அப்பகுதி  பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், நாகலூர் ஊராட்சியில் உள்ள அரசு நடு நிலைப்பள்ளியில், 2018 - 19 ஆம்  கல்வியாண்டில் அரசு ஏகலைவா  மாதிரி உண்டு உறைவிட மேல் நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஏற்காட்டில் முதல்முறையாக துவங்கப்பட்ட இப்பள்ளியானது, 2018 - 19 ஆம் கல்வியாண்டு முதல்  2022 - 23 ஆம் கல்வி ஆண்டு வரை,  தற்காலிகமாக செயல்பட்டு வந் தது. அப்போது, இப்பள்ளியில் பயி லும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 180 ஆக இருந்தது.  அதன்பின் 2022 – 23இல், 260 ஆக எண்ணிக்கை உயர்ந்த நிலையில், அரசு நடுநிலைப்பள்ளியில் போதிய இடவசதியில்லை என்று,  ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திலுள்ள  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விடுதிக்கு இப்பள்ளி மாற்றம் செய்யப்பட்டு, தற்போது வரை செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து, 2025 - 26 ஆம் கல்வி யாண்டில் மாணவர் மாணவியரின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்த தால், மாணவர்களுக்கு போது மான இடவசதி இந்த விடுதியில் இல்லை; எனவே, இப்பள்ளிக்கு இடம் ஒதுக்கி, கட்டடம் கட்டித்தர  வேண்டும் எனக்கூறி, அப்பகுதி  பொதுமக்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனு  அனுப்பினர். இந்நிலையில், இப் பள்ளியை அயோத்தியாபட்டணம் ஒன்றியம், காரிப்பட்டியிலுள்ள ஒரு  தனியார் பாலிடெக்னிக் கல் லூரிக்கு மாற்றுவதற்கான ஏற் பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், ஏற் காடு வட்டாரத்தில் தனியார் பள்ளி கள் இருந்தும், ஏகலைவா பள்ளி யில் மாணவர்களின் எண்ணிக்கை  அதிகரித்துக் கொண்டே இருக்க காரணம் இப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருவது தான். ஏற்காட் டில் அமைந்துள்ள 67 கிராம மக்க ளின் குழந்தைகளுக்கும் இப்பள்ளி யின் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. அதனால், மாண வர்களின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே வருகிறது. ஏற் காடு, தற்போது ஒரு பேரூராட்சி யாக இருக்கக்கூடிய நிலையில், இப்படிப்பட்ட பகுதியில் ஏகலைவா  பள்ளியை நடத்த போதுமான வசதி இல்லை என்று, வேறு ஊராட்சி ஒன்றியத்திற்கு மாற்றம்  செய்வது, 67 கிராம பழங்குடி மக் களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 2018 முதல் 2025  வரை இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்று, 35 மாணவர்கள் உயர்கல்வி மேற்கொண்டு வரு கின்றனர். இப்பள்ளியில் 19 ஆசிரி யர்கள், இரண்டு விடுதிக்காப்பாளர் கள், ஒரு தலைமையாசிரியர் பணி யாற்றி வருகின்றனர். அதில், 8 ஆசி ரியர்கள் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். இப்பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் மற் றும் மாணவவர்களுக்கு மாணவி யர் மாணவியர்களுக்கு இடையே  நல்ல புரிதல் இருக்கும் நிலையில்,  பள்ளியை வேறு பகுதிக்கு  மாற்றம் செய்தால், மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என் பதை கருத்தில் கொள்ள வேண் டும். இந்த மாதிரியான செயல்பாட்டி னால் ஏற்காடு பகுதி மலைவாழ் மக்களுடைய பொருளாதாரம் மற் றும் மாணவர்களின் மேற்படிப்பு முற்றிலும் பாதிப்பு ஏற்படும். எனவே, இப்பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை கைவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என்றனர். இதனிடையே, புதனன்று பள்ளியிலுள்ள பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு வந்த லாரியை அப்பகுதி பொது மக்கள் சிறைபிடித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.