tamilnadu

img

உரிய காலத்தில் ஊதியம் வழங்க வலியுறுத்தல்

உரிய காலத்தில் ஊதியம் வழங்க வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 17- பணிச்சுமையைக் குறைத்து, உரிய காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் செவ்வாயன்று மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க தலைவர் என். ரேவதி, செயலாளர் கே.தனலட்சுமி தலைமை யில் மனு அளிக்கப்பட்டது. இதில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 மணி நேர பணி  மட்டுமே என பணியமர்த்தப்பட்டோம். 20  பேருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் பார்த்து  மருந்து பெட்டகம் தருவது என பணி வரை யறை செய்யப்பட்டது. ஆனால் தற்போது  ஆரம்ப சுகாதார நிலைய பணி செய்ய வேண் டும். ஓசிஎஸ், ஸ்க்ரீனிங் டார்கெட் என்ற பெய ரில் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. உரிய  காலத்தில் ஊதியமும் அளிக்கப்படுவ தில்லை. ஊக்கத் தொகையும் வழங்கப்படுவ தில்லை. இதனால் வேலையிலிருந்து பலர் வெளியேறி வருகின்றனர். எஞ்சியவர்களை தக்க வைக்க பணிச்சுமையைக் குறைத்து, உரிய சலுகைகள் வழங்க வேண்டுமென அதில் வலியுறுத்தி உள்ளனர். மனு அளிக் கையில், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம் ஆகி யோர் உடனிருந்தனர்.