முரண்பாடு இல்லாமல் பதவி உயர்வு வழங்கிடுக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஜூன் 26- முரண்பாடு இல்லாமல் பதவி உயர்வு வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை அலுவலர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணி யிடங்களையும் நிரப்ப வேண்டும். நீண்டகாலமாக வெளி யிடப்படாமல் உள்ள இளநிலை உதவியாளர், உதவியா ளர், கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களது முதுநிலைப் பட்டி யலை உடனடியாக வெளியிட வேண்டும். முரண்பாடுகள் இல்லாமல் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை அலுவலர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை தருமபுரி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங் கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மண்டலச் செயலாளர் முனிராஜ், மாவட்டச் செயலா ளர் ரமேஷ், பொருளாளர் பாலாஜி, மாவட்ட துணைத்தலை வர் குணசேகரன், இணைச்செயலாளர்கள் சுமதி, கலா, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் குணசேகரன், வட் டச் செயலாளர் சக்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சி.காவேரி உட் பட பலர் கலந்து கொண்டனர்.