tamilnadu

கோவையில் மூன்றாவது நாளாக கனமழை

கோவையில் மூன்றாவது நாளாக கனமழை

கோவை, மே 26- கோவையில் மூன்றாவது நாளாக  கன மழை பெய்து வருவதனால், சில நாட்களுக்கு தண்ணீர் தட்டுப் பாடு ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீலகிரி மற்றும் கோவை மாவட் டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக் கப்பட்ட நிலையில் கோவையில் தற் பொழுது நகரின் பல்வேறு பகுதியில் பரவலாக கன மழை பெய்து வருகி றது. குறிப்பாக கோவை மாநகர் பகுதி யான காந்திபுரம், 100 அடி சாலை, சித்தாபுதூர், சிவானந்தா காலனி, வ.உ.சி பூங்கா, கோபாலபுரம், பந் தய சாலை, ராமநாதபுரம், இடையார் பாளையம், டி.வி.எஸ் நகர் கணு வாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் பரவலாக கனமழை பெய்து வரு கிறது. அதேபோல புறநகர் பகுதியான தொண்டாமுத்தூர், சிறுவாணி, காருண்யா, சாடிவயல், பூண்டி வெள்ளிங்கிரி, உள்ளிட்ட பகுதிக ளிலும் கனமழை பெய்து வருவ தால் கோவை மாவட்டத்தில் உள்ள  அனைத்து ஆறுகளிலும் மழைநீர்  அபகரித்து ஓடுகிறது. கோவை  மாநகர் பகுதியில் ஒரு சில இடங்க ளில் மழை நீர் தேங்கி இருப்பதினால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ள னர். மேலும், இதனால் ஒரு சில இடங் களில் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது. இந்த தொடர் மழை  காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற் படாது என்று விவசாயிகள் மகிழ்ச்சி யில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 123.2 செ.மீ மழை பதிவு  மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரங்களில் கன மழை பெய்து வருவ தால், முக்கிய நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள் ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் முழுவதும் 123.2  செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வால்பாறை சின்னக் கல்லாறு பகுதியில் 21.1 செ.மீ மழை யும், சிறுவாணி அடிவாரத்தில் 12.8 செ.மீ, சிங்கோனாவில் 12.4 செ.மீ, வால்பாறை தாலுக்கா 10 செ.மீ, என  மழை பதிவாகி உள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை யால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆத்துப்பாலம் பகு தியிலுள்ள சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தண்ணீரில் குளிக் கவும் மீன்பிடிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத் துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தொடர் மழை காரணமாக கோவை ஆலந்துறை அடுத்த செம்மேடு திரு.வி.க வீதிக்குள் கழிவு நீர் கலந்த, மழை நீர் புகுந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் மழை புகுந் ததால் நோய் தொற்று அபாயம்  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதி தாழ்வான இடத் தில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் மிக வும் கடுமையாக பாதிக்கப்பட்டு வரு வதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரச்சனை தொடர்ந்து வருவ தால் நிரந்தர தீர்வு காண நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். வெள்ளிங்கிரியில் மலை ஏறியவர்கள் கீழே இறங்குவதில் சிக்கல் பூண்டி மலைத் தொடர்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவ தால், ஞாயிறன்று முதல் வெள்ளிங் கிரி மலையேற்றத்திற்கு பக்தர்க ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பாகவே வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர்கள் கீழே இறங்கு வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலே உள்ள பக்தர்கள் மெதுவாக இறங்கி வருகின்றனர். அவர்களை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதே போல் வெள்ளிங்கிரி ஆறு மற்றும்  ஏழாவது மலைகளில் பனிக்காற்று டன் கனமழை பெய்து வருவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப் புள்ளது. வழக்கமாக மார்ச் முதல் மே  31 ஆம் தேதி வரை மட்டுமே வெள்ளிங் கிரி மலையேற்றதற்கு பக்தர்கள் அனு மதிக்கப்படுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு முன்னதாகவே பிப்ர வரி மாதம் முதல் பக்தர்கள் அனு மதிக்கப்பட்டு வந்த நிலையில் தற் போது கன மழை காரணமாக மே 31 க்கு முன்னதாகவே வெள்ளிங்கிரி மலை ஏற்றத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு கோவை மாவட்டத்தில் மழை யால் பாதிக்கப்பட்ட பகுதிகள்  மற்றும் நீர்வழிப் பாதைகளில் செய் யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் முத்து சாமி, மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில்  ஆய்வு மேற்கொண்டனர். இதில் மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட பிச் சனூர் பகுதியில் மழையால் வீடுகள் இடிந்து விழுந்து, பாதிக்கப்பட்ட இடத்தை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அதே பகுதி யில் முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள பொது மக்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர்  அவர்களுக்கான உதவித் தொகை களை வழங்கினார். இதையடுத்து ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள  அணைக்கட்டு மற்றும் செல்வபுரம் செல்வ சிந்தாமணி குளத்தின் நீர் வழிப் பாதை ஆகியவற்றை நேரில் ஆய்வு  மேற்கொண்டனர்.