தமிழ்நாட்டு தியாகிகள் நினைவுச் சுடருக்கு உணர்ச்சிமிகு வரவேற்பு
மதுரை, ஜூன் 24- இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டிற்கு, தமிழ் நாட்டு மாணவத் தியாகிகளின் நினைவாக சுடர் எடுத்துச் செல்லப் படுவதால், பல்வேறு பகுதிகளில் உண்ர்ச்சிமிகு வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) 18 ஆவது அகில இந்திய மாநாடு, கேரளம் மாநிலம் கோழிக் கோட்டில் ஜூன் 27 துவங்கி 30 வரை நடைபெற உள்ள நிலையில், இம்மாநாட்டிற்கு, தமிழ்நாட்டு மாணவத் தியாகிகளின் நினைவாக சுடர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி, தியாகிகள் சோமசுந்தரம் - செம்புலிங்கம் தங் களின் இன்னுயிரை ஈந்த- திருப் பரங்குன்றம் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி முன்பிருந்து, திங்களன்று புறப்பட்டது. இதற் கான நிகழ்ச்சியில், சோமு - செம்பு அறக்கட்டளை நிர்வாகி எஸ். காளி தாஸ், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், எஸ்எப்ஐ மாநில முன் னாள் செயலாளர் ஜோ. ராஜ் மோகன் ஆகியோர் பங்கேற்றனர். எஸ்எப்ஐ அகில இந்திய துணைச் செயலாளர் ஆதர்ஷ் எம் ஷாஜி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி ஆகியோர் தலைமையிலான தியாகிகள் நினை வுச் சுடர் பயணத்திற்கு பெத்தானி யாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் உணர்ச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. பொள்ளாச்சி மதுரையில் திங்களன்று புறப் பட்ட ஜோதிப் பயணம், திண்டுக்கல் மாவட்டம் வழியாக செவ்வாயன்று அகில இந்திய துணை பொதுச் செயலாளர் ஆதர்ஸ் எம் ஷாஜி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகியோர் தலைமையில் பொள்ளாச்சி நக ருக்கு எடுத்து வரப்பட்டது. அப் போது தியாகிகள் நினைவு ஜோதி பயணத்திற்கு இந்திய மாணவர் சங்கம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குழுக்கள் சார்பாக சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய மாணவர் சங்க கோவை மாவட்டத் தலைவர் அகமது ஜுல்ஃ பிகர் தலைமையில் நடைபெற்ற வர வேற்பு நிகழ்விற்கு மாநிலக் குழு உறுப்பினர் கல்கி ராஜ் வரவேற் றார். திருப்பூர் மாவட்டச் செயலா ளர் மணிகண்டன், மாவட்டத் தலை வர் விமல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிரவீன் குமார், ஷாலினீ, இந்திய ஜனநாயக வாலி பர் சங்க கோவை மாவட்டப் பொரு ளாளர் தினேஷ் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் சந்தியா நன்றி கூறினார்.