tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பாறை சரிவில் சிக்கி உயிரிழப்பு

கோவை, ஏப்.19– வெள்ளிங்கிரி மலையேற்றத்தின்போது எதிர்பாராத விதமாக பாறையில் இருந்து தவறி விழுந்ததில் கட்டி டத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த  துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் புவனேஷ் (18). கட்டிடக் கூலி வேலை செய்து வந்த இவர், தனது பள்ளி நண்பர்கள் இருவருடன் கடந்த 17 ஆம் தேதி கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். பின்னர் பூண்டி பகுதியில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்குச் சென்ற புவனேஷ், வெள்ளியன்று காலை தனது நண்பர்களுடன் மலையேற்றம் மேற்கொண்டார். ஏழா வது மலையில் தரிசனம் முடித்துவிட்டு, இரவில் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது மழை பெய்ததாக கூறப்படு கிறது. அப்போது எதிர்பாராதவிதமாக புவனேஷ் கால் தவறி பாறையிலிருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புவனேஷின் நண்பர்கள் இணைந்து அவரது உடலை சனிக்கிழமை அதிகாலை அடி வாரத்திற்கு கொண்டு வந்தனர். தகவலறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்த ஆலந்துறை காவல்துறையினர், புவனேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

மேட்டுப்பாளையம், ஏப்.19- மேட்டுப்பாளையத்தில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் களை பொருத்தி இருந்த தனியார் பேருந்து ஹாரன்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்து ரூ.5000 அபராதம் விதித்தார். தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ’ஏர் ஹாரன்கள்’ எனப்படும் ஒலிப்பான் களை அகற்ற சனியன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் அடுத்துள்ள காரமடை பேருந்து நிலையம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் கண்காணிப்பில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களை நிறுத்தி ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்த னர். ஆய்வின் போது அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பொருத்தியிருந்த தனியார் பேருந்துகளில் இருந்து அவற்றை அப்புறப்படுத்தி பறிமுதல் செய்தனர். மேலும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் அப ராதம் விதித்தனர்.

கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு

அவிநாசி, ஏப்.19- அவிநாசி அருகே கிணற்றில் விழுந்த முதியவரை தீய ணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட தண்டுக்கார தோட்டத்தில் சின்ன ஆறு முகம் என்பவர் வசித்து வருகிறார். மின் மோட்டார் பராமரிப்புப் பணிக்காக சென்றபோது எதிர்பாராத விதமாக, 40 அடி ஆழ முள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, சின்ன ஆறு முகம் கிணற்றில் விழுந்திருப்பது தெரியவந்தது. இதைய டுத்து தகவலறிந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, கயிறு மற்றும் பிற உபகரணங்களின் உதவி யுடன் பத்திரமாக கிணற்றுக்குள் இறங்கி, சின்ன ஆறுமு கத்தை உயிருடன் மீட்டனர். இதனைத்தொடர்ந்து, முதலுத விக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சரியான நேரத்தில் விரைந்து  செயல்பட்டு, முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித் தனர்.