மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் மார்க்கெட்டுகளில் அலை மோதிய கூட்டம்
கோவை, ஜூன் 22- மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் விலை குறைந்துள்ள தால், மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட் டம் ஞாயிறன்று அலைமோதியது. வார இறுதி நாள் என்பதால், மீன் வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர். மீன் வரத்து அதிகரித்ததால், விலைகளும் கணிசமாகக் குறைந்து காணப்பட்டன. அதன்படி, கடந்த வாரம் உயர்ந்த விலையில் விற்கப்பட்ட மீன்கள் இந்த வாரம் குறைந்த விலையில் விற்பனையாகின. குறிப்பாக, வஞ்சரம் மீன் கடந்த வாரம் கிலோவுக்கு ரூ.1,300 ஆக இருந்த நிலையில், இந்த வாரம் ரூ.700க்கு விற்கப்பட்டது. அதேபோல், பாறை மீன் ரூ.320க்கும், மத்தி ரூ.200க்கும், நெத் திலி ரூ.250க்கும், செம்மீன் ரூ.400க்கும், வாவல் ரூ.620க்கும், சங்கரா ரூ.260க்கும், நண்டு ரூ.430க்கும் விற்பனையாகின.