சேலம் அரசு மருத்துவமனையில், தயார் நிலையில் கொரோனா சிறப்பு வார்டு
சேலம், ஜூன் 6- கொரோனா பரவல் மீண்டும் அதிகரித் துள்ள நிலையில், சேலம் அரசு மருத்துவம னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் வகை யில் ஏற்படுத்தப்பட்ட வார்டு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவல் மீண்டும் அதி கரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் 200க்கும் மேற் பட்டோர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகமும், மாநில அரசுகளுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கை மூலம், தேவை யான மருந்து, மாத்திரைகள், வென்டிலேட்ட ருடன் கூடிய படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. பொது மருத்துவத்துறையில் தனி மைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வகையில் 50க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகை யில், தற்போது பரவி வரும் கொரோனா என் பது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. இருப்பினும், நோய் பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், 3 அல்லது 4 நாள்களில் குணமடைந்து வருகிறது. இத னால் பொதுமக்கள் அச்சப்படத் தேவை யில்லை. இருப்பினும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், என்றனர்.
‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ சேலம் மாவட்டம், கிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தலைமை வகித்து மாணவர்களிடையே உரையாற்றினார்.