பட்டியலின சிறுவன் மீது சாதிவெறி தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தருமபுரி, மே 3- பாப்பிரெட்டிப்பட்டி அருகே பட்டியலின சிறுவன் மீது சாதிவெறி தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும், என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் தருமபுரி மாவட் டச் செயலாளர் இரா.சிசுபாலன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், பாப்பிரெட்டிப் பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பட்டியலின சிறுவன் மீது பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன், செல் வம் உள்ளிட்ட பலர் சாதிப்பெயரைக்கூறி கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். தற் போது சிறுவன் அரூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏ.பள்ளப் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதியின் பெய ரைக் கூறி, வன்மத்துடன் சிறுவன் மீது தாக்குதல் தொடுத்ததை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் உட னடியாக கைது செய்ய வேண்டும், என வலி யுறுத்தப்பட்டுள்ளது.