இரண்டாம் நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை
மேட்டுப்பாளையம், ஜூன் 26- இரண்டாம் நாளாக நிரம்பி வழி யும் பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக ளான நீலகிரி மற்றும் கேரள மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக புத னன்று இரவு 8 மணியளவில் அணை அதன் முழு கொள்ளவை எட்டி யது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் 97 அடியாக நீர்மட்டத்தை நிலை நிறுத்தி அணையின் நீர்வரத்தான விநாடிக்கு 15,120 ஆயிரம் கன அடி அப்படியே உபரி நீராக அதன் நான்கு மதகுகள் வழியாக பவானி யாற்றில் திறந்து விடப்பட்டது. அணைக்கான நீர்வரத்து அப்ப டியே பவானியாற்றில் திறந்து விடப் பட்டதால் ஆற்றங்கரையோர மக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அணைக்கான நீர்வரத்து வியாழனன்று காலை சற்றே குறைந்து விநாடிக்கு 11,160 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் காலை முதல் அணையில் இருந்து 11,160 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற் றப்பட்டு வருகிறது. அணை இரண் டாம் நாளாக நிரம்பி வழிவதாலும் அணைக்கான நீர்வரத்து அப்ப டியே உபரிநீராக பவானியாற்றில் திறந்து விடப்படுவதாலும் கரை யோர பகுதிகளான மேட்டுப்பாளை யம் மற்றும் சிறுமுகை பகுதி மக்க ளுக்கு புதனன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வியாழனன்றும் தொடர்கிறது.
சோலையார் அணை நிரம்பியது
சோலையார் அணை நிரம்பியது கோவை மாவட்டம், வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சோலையார் அணை 5 டிஎம்சி தண்ணீர் கொண்டது 165 அடி உய ரம் உள்ளது. இதில் 160 அடி தண்ணீர் நிரம்பினால் தமிழகத்துக்கு தண்ணீர் வருவதற்காக சேடல் அணை வழியாக தண்ணீர் தமிழ கத்துக்கு செல்கிறது. கடந்த மே 25 ஆம் தேதி கனமழை ஆரம்பித்த நிலையில், அப்போது 12 அடியாக இருந்த அணை வியாழனன்று 160 அடி நிரம்பியது. தற்போது அணையில் இருந்து தண்ணீர் சேடல் டேம் வழியாக மானாம்பள்ளி, வழியாக பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது.