tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கும் சாலை

உடுமலை அருகே மானுப்பட்டியில் முழுமை அடையா மல் உள்ள சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி  போக்கு வரத்திற்கு இடையூறாக உள்ளது.  உடுமலை அருகே உள்ள மானுப்பட்டியில் இருந்து குமர லிங்கம் செல்லும் இணைப்பு சாலை ஆனைமலை சாலையில்  இணைகிறது. இந்த சாலை சீரமைப்பதற்காக தோண்டி விடப் பட்டு ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி  போக்குவரத்திற்கு இடை யூறாக உள்ளது. மேலும், இந்த வழியாக செல்லும்  இருசக்கர   வாகன ஓட்டிகள் மற்றும் விளை நிலங்களில் இருந்து விளை  பொருள்களைக் கொண்டு செல்லும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலம் துவங்கிவிட்டால் இந்த  சாலை சேறும் சகதியுமாகி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட  வேண்டிய நிலை ஏற்படும். எனவே பொதுமக்கள் மற்றும் விவ சாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தோண்டி விடப்பட்ட  சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்துக்குளி தாலுகாவில் 6 இடங்களில் கேஸ் விலை உயர்வு எதிர்ப்பு போராட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஊத்துக்குளி தாலுகாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊத்துக்குளி ஆர். எஸ், ஊத்துக்குளி டவுன்,  புதுப்பாளையம், பல்லகவுண் டன்பாளையம், குன்னத்தூர் ஆகிய ஆறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குன்னத்தூரில் கமிட்டி உறுப்பினர் ஏ.கே.மூர்த்தி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பி.சின்னசாமி உரை யாற்றினார், பல்லகவுண்டம்பாளையத்தில் கமிட்டி உறுப்பி னர் பி.காமராஜ் தலைமை வகித்தார். கமிட்டி உறுப்பினர்  க.பிரகாஷ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.கந்த சாமி ஆகியோர் உரையாற்றினர். புதுப்பாளையத்தில் கமிட்டி  உறுப்பினர் ஆர்.மணியன் தலைமை வகித்தார். கமிட்டி உறுப் பினர் கை.குழந்தைசாமி உரையாற்றினார். ஊத்துக்குளி டவு னில்  கிளைச் செயலாளர் கே.பெரியசாமி தலைமை வகித்தார்‌.  தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி, கமிட்டி உறுப்பினர் சசிக்கு மார், சக்திவேல் ஆகியோர் உரையாற்றினர். ஊத்துக்குளி ஆர்.எஸ்-ல் கிளை உறுப்பினர் ராஜா தலைமை வகித்தார்‌.  கமிட்டி உறுப்பினர் பாலமுரளி, விவசாய சங்க தாலுகா செய லாளர் கொளந்தசாமி, பழனிசாமி ஆகியோர் உரையாற்றி னர். இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளானோர் பங்கேற்றனர்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம்

திருப்பூர், ஏப். 16 – திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவர் உற்பத் தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் புதனன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர்  தா.கிறிஸ்துராஜ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.  திருப்பூர் மாவட்டத்தில் 37 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங் கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 8 உற்பத்தியாளர் நிறு வனங்கள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூல மும், 11 நபார்டு மூலமும், 6 நேபட் மூலமாகவும், 2 டிஎன்ஆர் டிபி மூலமும், மற்றவை சுயமாகவும் செயல்பட்டு வருகின் றன. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் பிரச்ச னைகள் குறித்தும், முக்கியமாக தங்களின் உற்பத்தி பொருட் களை உழவர் சந்தை மற்றும் இதர இடங்களில் சந்தைப்ப டுத்துவதற்கு புதிய திட்டங்களை உருவாக்கி உழவர்  உற்பத்தியாளர் நிறுவனங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க இக்கூட்டத்தில் பங்கேற்றோர் கோரிக்கை வைத்தனர்.  இவர்களது கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் கிறிஸ்து ராஜ் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (வேளாண்மை) சுந்தர வடிவேலு, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சு.வெங்க டாசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷீலா பூசலட்சுமி, முன்னோடி வங்கி மேலா ளர் துர்கபிரசாத், மாவட்ட மேலாளர் (நபார்டு) அசோக்குமார்  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

பொதுக்கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சிபிஎம் கோரிக்கை

திருமுருகன்பூண்டி நகராட்சி, 24 ஆவது வார்டு பகுதியில் அமைந்துள்ள பொதுக்கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மா பாளையம் கிளைகள் கோரிக்கை விடுத்துள்ளன. திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளை யம் அருகே 24 ஆவது வார்டு பகுதி அம்பேத்கர் நகரில் நூற்றுக் கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு  பல வருடங்களுக்கு முன்பு பொதுக்கழிப்பிடம் அமைக்கப் பட்டு பயன்படுத்தி வந்தனர், இக்கழிப்பிடம் சிதலமடைந்துள் ளது, இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல இப்பகுதியில் புதிதாகவும்  பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டு, சிறு பணிகள் செய்யா மல் இருக்கிறது. இப்பணிகளையும் செய்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபாளையம் கிளை கள் கோரிக்கை விடுத்துள்ளன.