உலக செஸ் அரங்கில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வெல்வது என்பது முனைவர் பட்டம் பெறுவது போன்றது. அதிலும், இளம் வதியல் அந்தப் பட்டம் வெல்வது அவ்வளவு சுலபமானது அல்ல. அந்த பட்டத்தை வென்ற உலகிலேயே இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் எனும் பெருமை தமிழக சிறுவன் ஒருவனுக்கு கிடைத்திருக்கிறது. நெற்றியில் விபூதி பட்டை, அமைதியான முகம், எளிமையான தோற்றம், புன்னகை நிறைந்த அந்தச் சிறுவன் பிரக்ஞானந்தா. பிறந்தது வளர்ந்தது அனைத்தும் சென்னை. பாடியில் வசித்து வரும் ரமேஷ் பாபு,மாநில அரசின் கூட்டுறவு வங்கி கிளை மேலாளர். தாய் நாகலட்சுமி. இவர்களின் இளைய மகன் பிரக்ஞானந்தா. மூத்த மகள் வைஷாலி. ரமேஷ்பாபுவின் குடும்பம் பாரம்பரிய விளையாட்டு குடும்பமல்ல.
முதல் தலைமுறையாக மகள் வைஷாலி விளையாட்டுத் துறையில் சதுரங்க வீராங்கனையாக அறிமுகமானார். அந்த சதுரங்க விளையாட்டில் மகனை ஈடுபடுத்தக்கூடாது என்று தந்தை விரும்பினார். சகோதரியை பார்த்து வளர்ந்த பிரக்ஞானந்தா, நான்கு வயதிலேயே சதுரங்க பலகை, காய்களுடன் நேரத்தை செலவழித் தான். அதைப் பார்த்த தந்தை தடை போடாமல் தனது முடிவை மாற்றிக் கொண்டார். பயிற்சியாளர் வேலாயுதத்திடம் முறைப்படி பயிற்சியில் சேர்த்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பிரக்ஞானந்தாவும் அவரது தந்தை ரமேஷ்பாபுவும் பயிற்சியாளர் ரமேஷை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட சிறுவர்களுடன் பிரக்ஞானந்தாவும் சகோதரி வைஷாலியும் பயிற்சியில் இணைந்து கொண்டனர்.
துள்ளுவதோ இளமை...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 வயதில் ‘யங் மாஸ்டர்’ பட்டத்தை வென்றவர் சகோதரி வைசாலி. கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான மூன்று தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளதால் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சகோதரியைக் காட்டிலும் வேகம் எடுத்த பிரக்ஞானந்தா, 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளைஞர் செஸ் சாம்பியன் தொடரில் 2013ஆம் ஆண்டில் செஸ் மாஸ்டர் (எப்எம்) பட்டம் வென்று அசத்தினான். அப்போது வயது 7. அடுத்த 2 ஆண்டுகளில் 10 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வரலாற்றில் 2016ஆம் ஆண்டு மிக இளைய சர்வதேச மாஸ்டர் (ஐஎம்) பட்டம் வென்று சாதனை படைத்தான்.
சாதனை மன்னன்...
ஐந்து வயதிலேயே செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்த துவங்கிய 10 வயது 10 மாதம் 19 நாட்களில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்று ஹங்கேரி நாட்டின் பிரபல செஸ் வீராங்கனை ஜூடிட் போல்காரின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்தான். இந்திய சதுரங்க அரங்கில் அடிக்கடி பல அதிசயங்கள் நடந்தாலும் அதிகம் பேசப்படுவது ஒரு சிலரது மட்டுமே. அதில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆண்டுகள் 10 மாதம் 19 நாட்களில் உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று முதல் நிலை வீரரான கோரோசனை பின்னுக்குத் தள்ளி ஒருவருடம் முன்னதாக படைத்த பிரக்ஞாந்தாவின் சாதனை அனைவராலும் பேசப்படுவதை பாராட்டும் பெற்று வருகிறது.
சதுரங்க விளையாட்டு களத்தில் சகோதரியை தோற்கடிக்க வேண்டும் ஆடத் தொடங்கிய பிரக்ஞானந்தா, தனது அதிர்ச்சியூட்டும் நகர்வுகளால் கிராண்ட் மாஸ்டர்களை மிரட்டி வருகிறான். கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்வதற்கான மூன்று விதிமுறைகளில் முதலாவதாக இத்தாலியில் பூர்த்தி செய்தார். அடுத்து ஸ்பெயினில் அதிரவைத்தார். கடந்த ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் நான்காவது இடம் பிடித்தது சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. இதில், வெற்றி பெற்றிருந்தால் கார்ல்சனை தோற்கடித்த உக்ரைன் வீரர் செர்கே கர்ஜாகின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்திருக்கும். பதின் பருவத்தை எட்டுவதற்குள் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டம் வென்று உலக சாதனை நிகழ்த்தியிருக்க முடியும். அந்த நல்ல வாய்ப்பபை நெருங்கி வந்தும் கடைசிக் கட்டத்தில் தவறவிட்டதால் தனது 14 வயதில் 2018 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது ‘கிராண்ட் மாஸ்டர்’ (ஜிஎம்)பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பரிமார்ஜன் நெகியின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.
சொந்த மண்ணில்...
இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த உலக ஜூனியர் செஸ் சாம்பியன் போட்டியில் 60 நாடுகளைச் சேர்ந்த 450 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, மிக சவாலான இந்தத் தொடரில் 7 ஆட்டங்களில் வெற்றியும் 3 ஆட்டங்களில் வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டு இறுதி ஆட்டத்திற்கு கம்பிரத்துடன் நுழைந்தார். அதிக புள்ளிகள் எடுத்ததால் தோல்வியை தவிர்த்தாலே போதும் என்ற நிலையில் ஜெர்மனி வீரர் வேலன்டினை எதிர் கொண்டு சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் சர்வதேச தொடரில் இளைய வயதில் “ கிரண்ட் மாஸ்டர்”பட்டம் வென்று சாதித்திருக்கிறார். இன்னும் மூன்று மாதங்கள் முன்னதாக இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருந்தால் ரஷ்ய வீரரின் சாதனையும் முறியடித்தது புதிய சாதனை படைத்திருப்பார்.
கூட்டு முயற்சி...
மகனின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் தந்தையின் கடின முயற்சியை ஒருபோதும் மறக்க முடியாது. போலியோவால் பாதித்த அவரால் வெளி நாடுகளுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் அந்த பணிகளையும் கவனித்து வரும் தாய் நாகலட்சுமி, இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நல்ல சம்பளம் வாங்கும் வேலையை விட்டு விட்டு சதுரங்க விளையாட்டில் முழுநேர பயிற்சியாளரான ரமேஷின் உழைப்பும் சேர்ந்திருக்கிறது.
அடுத்த இலக்கு...
செஸ் விளையாட்டில் மிகவும் திறமைசாலியும் புதிய புதிய நுணுக்கங் களையும் கையாள்வதில் தனக்கு நிகர் தானே என்பதை நிரூபித்துக் காட்டி வரும் பிரக்ஞானந்தா மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதும் கனவாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 மணி பயிற்சி பெற்று வருகிறார். சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் படித்து வரும் பிரக்ஞானந்தாவுக்கு பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணம் வாங்குவதில்லை. தொடர்ச்சியாக வெற்றிகள் பெற்று பதக்கங்களையும் பரிசுகளையும் குவித்து வீட்டின் அலமாரியை அலங்கரித்து வைத்திருக்கும் அச்சிறுவன் போட்டிகளுக்காக வெளிநாடு செல்வது நிதி நெருக்கடியால் தடைபட்டது. இதை அறிந்த பயிற்சியாளர் ரமேஷ், இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. அகில இந்திய செஸ் சமீபத்தில் நிர்வாகியும் ராம்கோ சிமெண்ட் தலைவருமான வெங்கட்ராம ராஜா, டி.வி சுந்தர் ஆகியோர் தொடர்ந்து உதவி செய்திருக்கிறார்கள். விஸ்வநாதன் ஆனந்தை தனது ரோல் மாடலாக கொண்டு விளையாடி வரும் பிரக்ஞானந்தாவின் அடுத்த இலக்கு உலகின் செஸ் சாம்பியன்ஷிப் பட்டமாகும். அந்தப் படத்தையும் மிக விரைவாக பெறுவதற்கு அனைவரும் வாழ்த்துவோம்.