tamilnadu

img

திருப்பூர் ஆய்வுக் கூட்டத்திற்கு எம்.பி.யை அழைக்காத பிரச்சனை

திருப்பூர், ஜூன் 10- திருப்பூர் மாவட்ட ஆட்சியர கத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்காத பிரச்சனையில் அரசி யல் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியை நேரில் சந்தித்து ஆட்சேபம் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர கத்தில் கடந்த 7ஆம் தேதி வளர்ச்சிப் பணிக்கான ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இதில் அமைச்சர் உடு மலை ராதாகிருஷ்ணன், ஆளும்  கட்சி  எம்எல்ஏக்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால் இம்மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய ஐந்து எம்.பி.க் களுக்கு அழைப்பு அனுப்பவில்லை. இதையடுத்து திங்களன்று திருப்பூர் திமுக மாநகரச் செயலா ளர் டி.கே.டி. மு.நாகராஜ், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் செ.முத்துக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.ரவி, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் வி.ஆர். ஈஸ்வரன், மதிமுக சார்பில் மு.சம் பத் உள்ளிட்டோர் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியை நேரில் சந்தித்து இப்பிரச்சனை குறித்து ஆட்சேபம் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, எம்.பி.க்க ளுக்கு அழைப்பு அனுப்பாமல் திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை. இனிவரும் காலத்தில் எம்.பி.க்க ளுக்கு ஆய்வுக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்புகிறோம் என்று தெரிவித்ததாக அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறினர்.