நாமக்கல், ஜூன் 21- நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், எலச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ரங்கசாமி என்பவ ரின் மனைவி பழனியம்மாள். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுவதற்கு நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத் தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், வியாழனன்று மாலை மர்ம நபர் ஒருவர் பழனியம் மாளை சந்தித்து,நீங்கள் ஓய்வூதி யம் கோரி விண்ணப்பித்திருந்தீர் களா, உங்களுக்கு பணம் வந்துள் ளது என்று கூறியுள்ளார். இதன் பின், ரூ.6 ஆயிரம்மட்டும் என பதி விட்ட இந்தியன் வங்கியின் காசோ லையை பழனியம்மாளிடம் வழங் கியுள்ளார்.இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபர் உடனடியாக நீங் கள் ரேஷன் பொருள் வாங்கும் எலச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கு சென்று உங்களது பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், இந்த காசோ லையை வழங்க தனக்கு ரூ.2 ஆயி ரத்து 800 தருமாறும் கேட்டு பெற் றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து பழனியம்மாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சென்று கேட்டபோது, இது போலியான காசோலை என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால், தான் ஏமாற்றப்பட் டதைஉணர்ந்த பழனியம்மாள் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி யின் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் உதவியு டன் எலச்சிபாளையம் காவல் நிலை யத்தில்புகார் மனு அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.