tamilnadu

img

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்கிடுக அரசு போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை, மார்ச் 10 -  அரசு போக்குவரத்து கழகத் தில் பணியாற்றும் ஊழியர்களின்  ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த் தையை உடனடியாக துவங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோவையில் செவ்வாயன்று காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 25 சதவிகித ஊதிய உயர்வு வழங்கிட வேண் டும். வேலைப்பளு திணிப்பை கைவிட வேண்டும். ஓய்வூதியர்க ளின் அனைத்து பிரச்சனைகளுக் கும் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போக்குவ ரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பினர் தமிழகம் முழுவதும் உள்ள தலைமைப் போக்குவரத்து பணிமனை முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள னர்.  இதன்ஒருபகுதியாக கோவை  மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பணிமனை முன்பு 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இப்போராட் டத்திற்கு எல்பிஎப் தொழிற்சங் கத்தின் தலைவர் பெரியசாமி  தலைமை வகித்தார். இதில்  கூட்டுக் கமிட்டி தொழிற்சங்கங்க ளின் நிர்வாகிகள் சிஐடியு வேளாங் கண்ணிராஜ், ஏஐடியுசி எம்.சண்முகம், எச்எம்எஸ் ஆர்.ராஜா, ஐஎன்டியுசி ஏ.தௌத்கான், டிடி எஸ்எப் வில்லியம்ஸ், ஏஏஎல் எல்பி விடுதலைரவி, எம்எல்எப் குமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் கோவை கோட்டத்திற்குட்பட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக, இப்போராட்டம் குறித்து தலைவர்கள் கூறுகையில், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணம் ஓய்வு பெறும் போது வழங்கப்படுவதில்லை. 2017 ஆம் ஆண்டு அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றப் பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு காணப்படும் என எழுத்துப் பூர்வமாக வாக்குறுதி அளித்தும் அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக் கைகள் மேற்கொள்ளவில்லை. போக்குவரத்து கழகங்களில் ஏற்ப டும் நஷ்டம் மற்றும் வருவாய் இழப்பைக் காரணம் காட்டி பேருந் துகள் நிறுத்தம் செய்யும் சூழல் உள்ளது. புதிய தொழிலாளர்கள் நியமனம் செய்யப்படாமல் வேலைப்பளு திணிப்பு நடை பெறுகிறது. எங்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் காரண மாக பொதுமக்கள் பாதிப்பிற்குள் ளாகிவிடக்கூடாது என்பதற்கா கவே தற்போது எங்களின் உடலை  வருத்தி இந்த காத்திருப்பு போராட் டத்தை நடத்துகிறோம். அரசு பணியவில்லை என்றால் மக்க ளின் ஆதரவை பெற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடு வோம். எனவே உடனடியாக அரசு  போக்குவரத்து தொழிலாளர்க ளின் நியாயமான கோரிக்கை களை ஏற்று தொழிற்சங்களை அழைத்துப் பேசி தீர்வு காண அரசும் நிர்வாகமும் முன்வர வேண்டும் என்றனர்.
நீலகிரி 
நீலகிரி மாவட்டம், உதகை யில் உள்ள மண்டல தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு எல்பிஎப் தொழிற்சங்கத்தின் நிர் வாகி நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கம் சிஐடியு தொழிற்சங்கத்தின் கணேசன், ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து சங்க கூட்டமைப்புகளின் நிர்வா கிகள் உட்பட ஏராளமான போக்கு வரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.