tamilnadu

img

17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் மாணவர்களை ஈர்க்கும் அறிவியல் அரங்கம்

திருப்பூர், பிப். 6 – 17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாள் காலையும் நடைபெறும் மாணவ,  மாணவிகளுக்கான அறிவியல் அரங்கம் நிகழ்ச்சி, பங்கேற்கும் மாணவர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. 17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா 2020இன் ஒரு பகுதி யாக தினமும் காலை நேரம் அறிவி யல் அரங்கம் நிகழ்ச்சி நடத்தப்படு கிறது. இதில் அறிவியல் சிந்தனை களை தூண்டும் விதமாக கருத்தா ளர்கள் நிகழ்வை நடத்துகின்றனர். புதன்கிழமை காலை அறிவி யல் அரங்கத்தில் ‘நீ எவ்வாறு தோன்றினாய்?’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் எஸ்.எஸ்.விஜய குமார் கருத்துரை வழங்கினார். ஆர் வத்தைத் தூண்டக்கூடிய விதத்தில் அவரது உரை அமைந்திருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நி கழ்வுக்கு ஆசிரியர் கி. சீரங்கராயன் தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது வரவேற்றார். அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆ.ஈசுவரன் முன்னிலை வகித்தார். நிறைவாக ஆசிப் அகமது நன்றி கூறினார். அதேபோல் வியாழக்கிழமை நடந்த அமர்வில் அறிவியல் இயக்க நிர்வாகி ஆ.ஈசுவரன், ஜப்பானிய “ஓரிகாமி” காகிதக் கலையை மாண வர்களுக்குச் செய்து காட்டி, அவர்க ளையும் காகித வடிவமைப்புகளைச் செய்யும்படி பயிற்சி அளித்தார். அதேபோல் மாணவர்கள் அனை வரும் அழகாக காகித வடிவமைப் பைச் செய்து காட்டினர். முன்னதாக நிகழ்ச்சிக்கு சுப்பையா பள்ளிக் குழுமத் தாளாளர் சுகுமாரன் தலைமை ஏற்றார். அறிவியல் கழ கத்தைச் சேர்ந்த ஆசிரியர் சிவகாமி வரவேற்றார். ஊராட்சி ஒன்றியப் பள்ளித் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி வாழ்த்திப் பேசினார். இதில் திரளான மாணவர்கள் பங் கேற்றனர்.