தருமபுரி, ஜூலை 25- தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி யில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. மத்திய பாஜக அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வரைவு தேசிய கல்விக்கொள்கை 2019 என்ற ஆவணத்தை வெளிட்டு அனைவரிடமும் கருத்துகோரி யுள்ளது. இக்கல்வி கொள்கை யில் இன்றைய பள்ளி கல்லூரி கல்விமுறை மாற்றியமைக்கப் படும், வெளிநாட்டு பல்கலைக்க ழகங்கள், பன்னாட்டு நிதி மூல தனத்தேவைக்கேற்ப பாடத்திட்டம் உருவாக்கப்படும். மாணவர் எண் ணிக்கை குறைவாக உள்ள பள் ளிகள் மூடப்படும். மேலும், 10 ஆம் வகுப்பு பிளஸ் 2 வகுப்பு கல்விமுறை மாற்றியமைக்கப்படும். அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு நடத்தப்படும். பட்டப்ப டிப்பு நான்கு வருடங்களாக மாற்றப்படும். தொடக்க கல்வி களிலேயே தொழில்கல்வி முறையை புகுத்தி குலக்கல்வி முறையை திணிப்பது, நர்சரி முதல் 12 ஆம் வகுப்பு வரை மும் மொழித்திட்டம் அமலாக்கப்படும். இது இந்தி திணிப்புக்கு வழி வகைசெய்யும். இட ஒதுக்கீடு வாய்ப்பு பறிக்கப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் இடம் அளிக்கும் முறை, ஆசிரியர்களின் பணி, ஊதிய உயர்வு அனைத்தும் பணி மூப்பு அடிப்படையில் இல்லாமல் தகுதி தேர்வு அடிப்படையில் நிர் ணயிக்கபடும். எனவே, பாரம்பரியம் என்ற பெயரில் அறிவியலுக்கு எதிரான கருத்துகளை திணிக்கும் அபாயம் போன்ற மோசமான தேசிய கல்விக் கொள்கையை மத்திய பாஜக மோடி அரசு திரும்பப்பெற வேண் டும் என வலியுறுத்தி வியாழனன்று மாநில முழவதும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக தருமபுரி ஒன்றியகுழு சார்பில் செம்மாண்ட குப்பம் கிராமத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சார கூட்டம் சிபிஎம் ஒன்றிய செயலாளர் என். கந்தசாமி தலைமையில் நடை பெற்றது. ஒன்றியகுழு உறுப்பி னர்கள் ரவி, மீனாட்சி,கிளைச் செயலாளர் மாது மற்றும் பால கிருஷ்ணன், காசி, முனுசாமி, ஜெயா, ராதா, லட்சுமி ஜோதி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.