சிபிஎம் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல்
கோவை, மார்ச் 11– இருகூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி சீராக விநியோகிக்க மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிதியளிப்பு பொதுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகா நிதி யளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கோவை இருகூர் சந்தை மைதானத்தில் செவ்வாயன்று தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்டாலின் குமார் தலைமையில் நடை பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்க ளில் ஒருவரான முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் கே.சி. கருணாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலு சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, இருகூர் பேரூ ராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம், சுகாதார வசதி கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண் டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூலூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் மார்க் சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் வீடுவீடாக கட்சியின் வளர்ச் சிக்காக சேகரித்த ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்தை சூலூர் தாலுகா குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் தலை வர்களிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் எஸ்.ஜோதிபாசு, ஏ.பார்த்தசாரதி, ஆர். சண்முகம், பி.சுப்பிரமணி, வி.விஜயராகவன், பி.நடரா ஜன், மு.கோதண்டராமன், பிரான்ஸ் சேவியர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவாக சத்துணவு ஊழி யர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் எம்.பழனிச்சாமி நன்றி கூறினார்.