tamilnadu

img

விசைத்தறி தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ வழங்குக

சிஐடியு பிரச்சார இயக்கம்

நாமக்கல், நவ. 27- மத்திய, மாநில அரசுகளின் தொழி லாளர் விரோத போக்கை கண்டித்து பள்ளிபாளையத்தில் சிஐடியு தொழிற் சங்கத்தினர் செவ்வாயன்று பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க கூட்டு பேர உரிமை யை நிலைநாட்ட வேண்டும். பொரு ளாதார நெருக்கடியில் வேலை இழந்து  வெளியேற்றப்படும் தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். அனைத்துப் பிரிவு தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்  மாதம் ரூ.21 ஆயிரம் வழங்கிட வேண்டும். விசைத்தறி தொழிலாளர் களுக்கு இஎஸ்ஐ, பிஎப் மற்றும் 20  சதவிகித போனஸ், ஒப்பந்த அடிப் படையில் கூலியும் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை நகர்ப்புறங்களில் அமல்படுத்த வேண்டும்.   விவசாயத்தை பாதுகாக்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில  அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி  பிரச்சார இயக்கம் பள்ளிபாளை யத்தில் நடைபெற்றது. இப்பிரச்சார இயக்கத்திற்கு சிஐடியு நாமக்கல் மாவட்ட துணைத் செயலாளர் கே. மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் எம்.அசோகன், எஸ்.முத்துக்குமார், காசி விசுவநாதன் மற்றும் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி உள்ளிட்ட திரளா னோர்  கலந்து கொண்டனர்.