tamilnadu

img

பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து

திருப்பூர், ஜூலை 23 - ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்குத் தலைமை ஏற்ற  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத் தலைவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசைக் கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் திருப்பூரில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரகம் மற்றும்  13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணி செய்யக்கூடிய வளர்ச்சித்துறை அலுவலர்கள் செவ்வா யன்று பணி செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் வளர்ச்சித் துறை சார்ந்த பணிகள் பாதிக்கப் பட்டன. குறிப்பாக கட்டுமானப் பணிகளுக்கு வழங்கும்  சிமெண்ட், கம்பி போன்றவை வழங்கப்படவில்லை.  மேலும் நூறு நாள் வேலை திட்டத்தில் கணினியில்  பதிவேற்றம் செய்ய வேண்டிய விபரங்களும் நடைபெறவில்லை. இத்துடன் உள்ளாட்சிகளில் குடி நீரேற்றம் உள்பட வளர்ச்சித் துறை சார்ந்த பல்வேறு  பணிகளும் முடங்கின. திருப்பூர் மாவட்டத்தில் இப்போராட்டம் முழு வெற்றி பெற்றது என்று மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தெரிவித்தார். 

அவிநாசி

அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வா யன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு வட்டக் கிளை தலைவர் ஏ.வெள்ளி யங்கிரி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பி.  ரமேஷ் முன்னிலை வகித்தார்.