வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் ஆட்சியரிடம் முறையீடு
உதகை, நவ.21- உதகை நகராட்சிக்கு சொந்தமான கடைகளை உள்வாடகைக்கு விடுவதை தடுக்க வேண்டும் என வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக, உதகை மற்றும் குந்தா உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, நாங்கள் பள்ளி மற்றும் கல்லூ ரிகளில் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பு எதுவும் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். அரசு வேலையும் கிடைப்ப தில்லை. எனவே கடைகள் ஏதாவது ஆரம் பித்து சுயதொழில் தொடங்க முயற்சி கள் மேற்கொண்டு அதற்காக கடைகளை தேடிக்கொண்டு இருக்கின்றோம். இந்நிலையில் உதகை நகராட்சிக்கு சொந்தமான கடைகளை பலர் அதிக பணம் பெற்றுக்கொண்டு உள்வாடகைக்கு விடுகின்றனர். இதனால் சில தனிநபர்கள் மட்டுமே பயனடைகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலை யிட்டு முறைகேடான முறையில் உள் வாடகைக்கு விடப்பட்டிருக்கும் நகராட்சி கடைகளை கண்டறிந்து எங்களை போன்ற வேலைவாய்ப்பு இல்லாமல் சுயதொழில் செய்திட விரும்பும் இளைஞர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.