பொள்ளாச்சி, மே 27-பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அனைத்துப்பள்ளிகளுக்கும் பாட புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் திங்களன்று அனுப்பி வைக்கப்பட்டது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகள் என மொத்தம் 61 பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் 24,493 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி வகுப்புகள் வருகின்ற ஜுன் 3ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இந்நிலையில், பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் அமைந்துள்ள பெண்கள் நகரமன்ற மேல்நிலைப்பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளால் ஒவ்வொரு பள்ளி வாரியாக பள்ளி பாட புத்தகங்கள், நோட்டுகள், ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் புத்தகப் பைகள் உள்ளிட்ட 7 வகையான உபகரணங்கள் டெம்போ மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் மூலமாக பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன இவை அனைத்தும் பள்ளி திறக்கப்படும் நாளன்று மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அலுவலர்கள் கூறினர்.