tamilnadu

பொள்ளாச்சி: ஆட்டோக்கள் பறிமுதல் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு

பொள்ளாச்சி, மே 7- பொள்ளாச்சி நகர் பகுதிகளில் உரிய அனுமதி யின்றி இயக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆட்டோக் கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட் டது. கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்து வரு கின்ற நிலையில் மே 17 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அம லில் உள்ளது. இந்நிலையில், சில கட்டுப்பாடு களுடன் தமிழகத்தில்  தளர்வு அளிக்கப்பட்டது. இந் நிலையில்  செவ்வாயன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இயக் கப்பட்ட நூற்றுக்கணக்கான  பயணிகள் ஆட்டோக் களை பொள்ளாச்சி காவல் துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில்;- நாங்கள் அத்தியாவசிய தேவைக்காகவும்,  மருந்து கள் வாங்குவதற்குமே வெளியே வந்தோம். இந் நிலையில் ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறி யதாக பொள்ளாச்சி காவல் துறையினர் ஆட்டோக் களை பறிமுதல் செய்து வழக்கும்  பதிவு செய்துள்ள னர். இருசக்கர வாகனங்கள் இல்லாத ஆட்டோ ஓட்டுநர்கள் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க செல்ல முடிவதில்லை. வரு மானமும் இல்லை. அரசும் போதுமான நிவாரணம்  வழங்கவில்லை. எங்களது அத்தியாவசிய தேவைக் காக மருத்துவமனை, காய்கறிகள் வாங்குவதற்காக கூட வெளியே வந்தால், எங்களது  ஆட்டோக்களை காவல் துறை  பறிமுதல் செய்வது, வழக்கும்  பதிவு செய்கிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பறி போகும் சூழல் அமையும். தமிழக அரசு ஆட்டோ ஒட்டுநர்களின் வாழ்வாதாரம் காக்கவும், இது போன்ற வழக்குகளை திரும்பப் பெறவும் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்த னர்.