திருச்சி, மே 21-உடற்பயிற்சி செய்யாததால் வெயிலில் நிற்குமாறு தண்டிக்கப்பட்ட சிறுமி மயக்கமடைந்தார். தீவிர சிகிச்சையளித்தும் பலனில்லாமல் அந்த சிறுமி மரணமடைந்ததையடுத்து, அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருச்சி மாவட்டம் காட்டுப் புத்தூரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி யன். உடற்பயிற்சி ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் நித்தியகமலா. மே 20 திங்களன்று மதியம் 12 மணியளவில் தன் குந்தை லத்திகாஸ்ரீயைத் தூக்கிக்கொண்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நித்திய கமலா சென்றார். வீட்டில் பாடம் படிக்க வில்லை என்பதால் குழந்தையை அடித்து வெயிலில் நிற்க வைத்துத் தண்டனை அளித்ததாகவும், வெயில்தாங்காமல் தனது மகள் மயக்க மடைந்துவிட்டாள் எனவும் கூறி யுள்ளார். சிறுமி லத்திகாஸ்ரீயின் உடல்நிலை மோசமானதால், அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.சேலம் மருத்துவமனை மருத்துவர்கள் லத்திகாஸ்ரீயைச் சோதித்தபோது, அவரது முதுகில் ரத்தக்காயங்கள் இருந்தது பற்றி நித்தியகமலாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு, குழந்தை படிக்காததால் தண்டனை அளித்ததாக அவர் கூறி யுள்ளார். தீவிர சிகிச்சையளித்தும் பலனில்லாமல், லத்திகாஸ்ரீ உயிரிழந்தார்.இதையடுத்து, காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோடை விடுமுறையில் குழந்தையைப் படிக்குமாறு துன்புறுத்துவதற்கு என்ன அவசியம் என்று போலீசார் நித்தியகமலாவிடம் கேட்டனர்.நித்தியகமலாவின் இரண்டாவது கணவர் முத்துபாண்டியன் என்பதும், முதல் கணவர் பிரசன்னாவுடன் ஏற்பட்டகருத்து வேறுபாட்டால் குழந்தை லத்திகாஸ்ரீயை அழைத்துக்கொண்டு அவர் தனியே வந்ததும், போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.உடற்பயிற்சி ஆசிரியரான முத்து பாண்டியன் குழந்தை லத்திகாஸ்ரீயைக் கடினமான உடற்பயிற்சிகள் செய்யு மாறு வற்புறுத்துவது வழக்கம். திங்களன்றும் அதுபோன்று உடற் பயிற்சி செய்யச் சொன்னபோது லத்திகாஸ்ரீ மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த முத்துபாண்டியன், அவரைத் தென்னை மட்டையால் தாக்கியுள்ளார். அதன்பின் வெயிலில்நிற்கவைத்துள்ளார். வெளியே சென்றநித்தியகமலா வீடு திரும்பியபோது, லத்திகாஸ்ரீ மயங்கிக் கிடந்ததைக் கண்டு பதறியுள்ளார். மருத்துவமனைக்கு அவரைத் தூக்கிச் சென்றுள்ளார். நித்தியகமலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முத்துப்பாண்டியனை போலீசார் கைது செய்தனர். முத்துபாண்டியன், நித்தியகமலா இருவரிடமும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. சிறுமி மரணத்தின் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளனவா என்று போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.