tamilnadu

img

பாலியல் வன் கொடுமை செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

சேலம், ஜூலை 5- பாலியல் புகாருக்கு ஆளான அரசுப் பள்ளி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வேம்படி தாளம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆட்டையாம்பட்டி அருகிலுள்ள காளிப்பட்டி பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இந்நிலை யில் கடந்த வருடம் மாணவி ஒரு வரிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு, தற்போது அவர் 5 மாத கர்ப்பமாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அங்கு உள்ள உண்டு, உறைவிடப் பள்ளியில் பயின்று வந்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அப் பள்ளி வளாகத்திற்குள் நடைபெறு வது வாடிக்கையாக உள்ளது என்பதை அறிந்த பெற்றோர்கள், வேம்படிதாளம் அரசு மேல்நிலை பள்ளி வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட்டனர். மேலும் இந்தப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பிள்ளை களை வெளியே அனுப்புமாறுமாறும் மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.  இத்தகவலறிந்து முன்கூட்டியே பள்ளி முன்பு காவல் துணை ஆணை யர் ஈஸ்வரன் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்த னர். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் ஆகி யோர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.