tamilnadu

img

அவிநாசியில் பள்ளி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

அவிநாசி, ஜூலை 18-  அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சட்ட  உதவி குறித்து அவிநாசி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் புத னன்று முகாம் நடை பெற்றது.  சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலை மையாசிரியர் (பொ)  திலகவதி தலைமைவகித் தார். இதில் அவிநாசி வட்ட  சட்டப் பணிகள் குழு தலைவரும்,  சார்பு நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.பிரபா சந்திரன் பேசியதாவது,  நாம்  எதை செய்ய வேண்டும். எதை  செய்யக்கூடாது என்பதை வீட்டில்  பெற்றோர்கள் சொல்லிக் கொடுப் பார்கள். அதையே வீட்டிற்கு  வெளியே சமுதாயத்தில் சொல்லிக் கொடுப்பது தான் சட்டம். நியாய மான பிரச்சனைகள் எதுவாக இருந் தாலும் சட்ட உதவி மையத்தில் வந்து கூறினால் சட்ட பணிகள்  குழுவில் உள்ள வழக்குரைஞர்  உங்களுக்கு உதவுவார்கள்.

  அந்த வழக்கு குற்றவியலாக இருந்தால் காவல் துறைக்கும், உரிமையில் வழக்காக இருந்தால் சிவில் ரைட்ஸ் பிரிவுக்கும் அனுப்பி  வைப்பார்கள். புகாரின் பாதிப்பு நியாயமாக இருக்கும் பட்சத்தில்  பேனா, பென்சில் உள்பட எந்த செலவும் இல்லாமல் அரசே வழக் கறிஞர் நியமித்து வழக்குப் பதிவு செய்யப்படும். பிறகு இதற்கு எழுத்து  வடிவம் கொடுத்து, அதற்கான  வழக்குரைஞர் நியமிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர  பரிந்துரைக்கப் படும். இதற்காக வேறு யாரிடமும்  சென்று எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை. வழக்குரைஞர் கட்டணத்தையும் சட்ட உதவி மையம் மூலம் அரசாங்கமே கொடுத் துவிடும். ஒரு ஊரில் நீதிமன்றம் என்று இருந்தாலே அங்கு சட்ட உதவி மையம் இருக்கும். இதற்காக அந்த மையத்தில் நாள்தோறும் அலுவலர் நியமிக்கப்பட்டு பணி நேரத்தில் அவர் உங்கள்  பிரச்சினையை கேட்டு அதற்கு எழுத்து வடிவம்  கொடுத்து பிரச்சனை  தீர்வதற்கான நடவடிக்கை  எடுக்கப்படும். இதனை உங்கள் தோழிகள் மற்றும்  உறவினர்கள் உள்பட மற்ற வர்களுக்கும் தெரியப் படுத்த வேண்டும். அதேபோல்  பெண்கள் மீது நடக்கும் அநீதிகளை  தைரியமாக பெற்றோர்களிடம்  கூறவேண்டும். முடியாவிட்டால் ஆசிரியர்களிடம்  அல்லது நேரி டையாக காவல் நிலையத்திற்கு  சென்று புகார் கொடுக்க வேண்டும்  என்றார். இதையடுத்து ஏராளமான  மாணவிகள் சட்ட உதவிகள் குறித்து பல்வேறு கேள்விகளை  கேட்டறிந்தனர்.