tamilnadu

img

மலைவாழ் மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

நாமக்கல், அக்.18- ராசிபுரத்தில், மலைவாழ் மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளியன்று நடைபெற்றது.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் ராசிபுரம் சார்பு நீதிமன்றம் இணைந்து மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் புகார் மனு பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.  ராசி புரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு  உட்பட்ட   தேங்கல்பாளையம் கிராமத்தில் உள்ள கீழூர் ஊராட்சி  பொது சேவை மைய வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு  முகாமை நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந் தனர்.  இம்முகாமிற்கு  நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் நீதிபதி கே.இளவழகன் தலைமை தாங்கினார். ராசிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பு நீதிபதி சரவணன் முன்னிலை வகித் தார். இதில் சாலை, தெருவிளக்கு வசதி, கல்வி தொடர் பான உதவிகள், பென்சன், தொழிலாளர் உதவி என பல்வகை குறைகளை தீர்க்க வலியுறுத்திய சுமார் 110 மனுக்கள் பெறப்பட்டன.  மேலும், இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி கௌசல்யா மற்றும் தாட்கோ அலு வலர் கஸ்தூரி பங்கேற்று மக்களுக்கு நல உதவித் திட்டங்களை குறித்து விளக்கங்கள் அளித்தனர்.  இதில்  ராசிபுரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள், தேங்கல் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஸ்வரன், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.