districts

மூன்றாம் பாலினத்தவர் குறித்த  சட்ட விழிப்புணர்வு முகாம்

 அய்யம்பேட்டை, ஜூன் 30-   தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் ரகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான திருநங்கை கள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய சட்ட விழிப்பு ணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல் கனி, சிறந்த திருநங்கைக்கான டாக்டர் பட்டம் பெற்ற தஞ்சாவூரை சேர்ந்த ராகினி, பொறி யியல் பட்ட  படிப்பு முடித்த திருநங்கையும் கலந்துக் கொண்டு பேசினர்.  இதில், கல்லூரி முதல்வர், நேர்முக உதவியாளர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.