districts

img

சட்ட விழிப்புணர்வு முகாம்

 பாபநாசம், மே 19- பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் பொது மக்களுக்கான நுகர்வோர் உரிமைகள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலக  கூட்ட அரங்கில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவரும், வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவருமான அப்துல் கனி தலைமை வகித்தார். சட்டப் பணியாளர் தனசேகரன் வரவேற்றார். பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி முன்னிலை வகித்தார்.  இதில் அரசுக் குற்றத் துறை உதவி வக்கீல் சுதா, பாபநாசம் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் வெற்றிச் செல்வன், வட்ட வழங்கல் அலுவலர் சிவக் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலத் கலந்துக் கொண்டனர்.