tamilnadu

img

திருப்பூரில் சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

திருப்பூர், மே 17–திருப்பூர் மாவட்ட சிறை வளாகத்தில் சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருப்பூர் மாவட்ட சிறைத் துறை சார்பில் இம்முகாம் நடத்தப்பட்டது. சட்டப்பணிகள் குழுச் செயலாளர், உரிமையியல் நீதிபதி ஏ.தீபா தலைமை ஏற்றார். அவர் பேசுகையில்,இலவச சட்ட உதவி என்பது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறைவாசிகளுக்கு மட்டுமின்றி, அவர்கள் சார்ந்தகுடும்பத்தினர் சமூகத்தில் சந்திக்கும் நடைமுறை சிக்கல்களைப் போக்கவும் பயன்படும். திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவால் முன்மாதிரியாக நியமிக்கப்பட்ட சட்ட உதவி வழக்கறிஞர்கள் குழு இருதரப்புக்குமான ஒரு பாலமாக இருந்து சட்டரீதியான உதவிகள் மற்றும்ஆலோசனைகள் வழங்குகிறது. இதை சிறைவாசிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.இம்முகாமில் சட்ட உதவி வழக்கறிஞர்கள் குழு வழக்கறிஞர்கள் உதயகுமார், ஸ்ரீராதா ஆகியோர் சட்ட ஆலோசனைகளை வழங்கினர். இதில் சிறைப் பணியாளர்கள், மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு ஊழியர்கள்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக மாவட்டசிறைக் கண்காணிப்பாளர் ஆர்.குணசேகரன் நன்றி கூறினார்.