கோவை, மே. 7 - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பால் மற்றும் பால் உபபொருட் கள் விற்பனை செய்ய ஆவின் பாலக உரிமத்தினை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி வழங்கினார். கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினசரி 1.70 லட்சம் லிட்டர் பால் கோவை மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலும் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்குடனும் இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்வதற்கான ஆவின் பாலக உரிமம் கோவை மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப் பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி கூறுகையில், இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதுடன் அவர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்துவதற்கும், அதிக அளவிலான பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கும் இத் திட்டம் வழிவகுக்கும் என குறிப்பிட்டார். இந்நிகழ்வின் போது ஆவின் தலைவர் கே. பி. ராஜூ மற்றும் ஆவின் பொது மேலாளர் ஆர். ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.