tamilnadu

img

சிபிஎம் கொடி கம்பத்தை சாய்த்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தல்

நாமக்கல், செப்.2-  நாமக்கல் அருகேயுள்ள ஏளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கொடி கம்பத்தை சாய்த்த சமூக விரோதிகளை உடனடியாக கைது  செய்திட வேண்டுமென காவல் துறையை மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் ஏளூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற 4 ஆவது வார்டு பெருமாள் கோவில் பகுதி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம்  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், சனியன்று இரவு சமூகவிரோதி கள் அங்கிருந்த கொடிக்கம்பத்தை சாய்த்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி யினர் அப்பகுதியில் திரண்டு வந்து பார்வையிட்டனர். மேலும், இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் என். ஜோதி தலைமையில், கொடி கம் பத்தை சாய்த்த சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சத்திரம் காவல் நிலையத்தில்  புகார் மனு அளிக் கப்பட்டது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட் டச் செயலாளர் எஸ்.கந்தசாமி கூறிய தாவது, ஏளூர் கிராம ஊராட்சி மன்ற 4 ஆவது வார்டு பகுதியில் மார்க் சிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின் றனர். மேலும், அப்பகுதி மக்கள் நலனுக்காகவும், அடிப்படை தேவை களுக்காகவும் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இதன் காரணமாகவே எரிச்சலடைந்த சமூக விரோதிகள் திட்டமிட்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி கம் பத்தினை  சேதப்படுத்தியுள்ளனர். இந்த அராஜக செயல்களை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாமக் கல் மாவட்ட குழு வன்மையாக கண் டிக்கிறது. மேலும், இச்சமூக விரோதி களை காவல்துறையினர் உடனடி யாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.